பாதுகாப்புத்துறை அமைச்சராக அருண்ஜேட்லி பொறுப்பேற்பு

Last Updated : Mar 14, 2017, 04:15 PM IST
பாதுகாப்புத்துறை அமைச்சராக அருண்ஜேட்லி பொறுப்பேற்பு title=

 

புதுடெல்லி: பாதுகாப்பு துறை அமைச்சராக இருந்த மனோகர் பாரிக்கர் பதவியை ராஜினாமா செய்ததையடுத்து, அருண் ஜேட்லிக்கு கூடுதல் பொறுப்பாக பாதுகாப்பு துறை வழங்கப்பட்டுள்ளது. 

பாதுகாப்பு துறை அமைச்சராக இருந்த மனோகர் பாரிக்கர் கோவா முதல்வராக இன்று பொறுப்பேற்க உள்ளார். இதனால் மத்திய அமைச்சர் பதவியை அவர் நேற்று ராஜினாமா செய்தார். 

மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லியிடம் கூடுதல் பொறுப்பாக ஒப்படைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசில் 2-வது முறையாக பாதுகாப்பு துறையை கூடுதல் பொறுப்பாக அருண் ஜேட்லி ஏற்றுள்ளார். 

இந்நிலையில் அருண் ஜேட்லி தற்போது மத்திய அமைச்சரவையில் நிதியமைச்சராகவும் பெருநிறுவன விவகாரங்கள் துறை அமைச்சராகவும் பொறுப்பேற்றுள்ளார்.

Trending News