60 அடி பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து; 48 பேர் பரிதாப பலி

பேருந்து 60 அடி பள்ளத்தில் விழுந்தது விபத்துக்குலானத்தில் 48 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்! 

Last Updated : Jul 1, 2018, 06:18 PM IST
60 அடி பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து; 48 பேர் பரிதாப பலி title=

பேருந்து 60 அடி பள்ளத்தில் விழுந்தது விபத்துக்குலானத்தில் 48 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்! 

உத்தர காண்ட் மாநிலம் பவுரி கர்வாலா மாவட்டத்தில் உள்ள நனிதன்டா மலைப்பகுதியில் சென்று கொண்டிருந்த பேருந்து ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து 60 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே சுமார் 30 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 

இதையடுத்து மீட்ட்புபடையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டனர். மேலும், இந்த விபத்தில் 12 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களை அருகில் இருந்த மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்கான அனுமதித்துள்ளனர். சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம் உள்ளது என தெரிவித்துள்ளனர்.

 

Trending News