கெங்கேரியில் வருமானவரி துறை அதிகாரியின் மகன் கொலை!

Last Updated : Sep 22, 2017, 05:00 PM IST
 கெங்கேரியில் வருமானவரி துறை அதிகாரியின் மகன் கொலை! title=

பெங்களூருவை அடுத்த கெங்கேரியில், இன்று(வெள்ளி) காலை 19 வயது சிறுவனின் சடலம் ஒன்று கண்டெடுக்கப் பட்டுள்ளது. 

விசாரணையில் இவரது பெயர் சரத் எனவும், இவர் இரண்டாம் ஆண்டு ஆட்டோமொபைல் இன்ஜினியரிங் பயிலும் மாணவர் எனவும் தெரிகிறது. மேலும் இவர் வருமானவரி துறை அதிகாரியின் மகன் எனவும் தெரிகிறது.

முன்னதாக, கடந்த செப்டம்பர் 12-ஆம் தேதி வெளியே சென்ற இவர் வீடு திரும்பவில்லை என இவரது பெற்றோர் காவல்துறையினில் பிகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் அடிப்படையில் இவரை காவல் துறை தேடிவந்தது. ஆனால் காவல்துறையினரால் இவரது சடலத்தை மட்டுமை கண்டுப்பிடிக்க முடிந்தது.

இச்சம்பவம் தொடர்பாக இதுவரை 6 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். விசாரணையில் சரத் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று காலை 6.30 மணியளவில் கெங்கேரி பகுதியில் அவரது வீட்டின் அருகே கொள்ளப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

Trending News