வேறு எந்த கட்சியிலும் சேர போவதில்லை -உர்மிளா அதிரடி முடிவு!

நடிகையாக இருந்து அரசியல்வாதியாக உருவெடுத்த உர்மிளா மாடோண்ட்கர் செவ்வாய்க்கிழமை, தான் வேறு எந்த கட்சியிலும் சேரப்போவதில்லை என்று அறிவித்து அனைத்து ஊகங்களையும் அமைதியில் ஆழ்த்தியுள்ளார்!

Last Updated : Sep 17, 2019, 04:49 PM IST
வேறு எந்த கட்சியிலும் சேர போவதில்லை -உர்மிளா அதிரடி முடிவு! title=

நடிகையாக இருந்து அரசியல்வாதியாக உருவெடுத்த உர்மிளா மாடோண்ட்கர் செவ்வாய்க்கிழமை, தான் வேறு எந்த கட்சியிலும் சேரப்போவதில்லை என்று அறிவித்து அனைத்து ஊகங்களையும் அமைதியில் ஆழ்த்தியுள்ளார்!

சமீபத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய மாடோண்ட்கர், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவின் தனிப்பட்ட உதவியாளராக இருக்கும் மிலிந்த் நர்வேகரை சந்தித்தார். இதன் காரணமாக அவர் சிவசேனா கட்சியில் இணையலாம் என கிசுகிசுக்கப்பட்டது. இந்நிலையில் தான் எந்த கட்சியிலும் இணையப்போவதில்லை என உர்மிளா அறிவித்துள்ளார்.

"நான் வேறு எந்தக் கட்சியிலும் சேரவில்லை. தன்னை வேறு எந்த கட்சிகளுடன் இணைத்து பேசுவது குறைந்தபட்சம் கூட நியாயமற்றது" என காங்கிரஸ் கட்சின் குறுகிய கால உறுப்பினர் செய்தியாளர்கள் மத்தியில் குறிப்பிட்டுள்ளார்.

உர்மிளா மற்றும் தாக்கரேயின் பொதுஜன முன்னணிக்கு இடையிலான சந்திப்பு மகாராஷ்டிராவில் அரசியல் அரங்கில் ஊகங்களைத் தூண்டியுள்ளது. என்றபோதிலும், சிவசேனாவில் உர்மிளா சேர்ந்தார் என்ற ஊகங்களை முழுமையாக நிராகரித்துள்ளார் உர்மிளா. இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், இது ஒரு "மரியாதைக்குரிய கூட்டம்" என்றும் குறிப்பிட்டுள்ளார். எனினும்., மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தல் 2019-ஆம் ஆண்டின் பிற்பகுதியில் நடைபெறக்கூடும் என்பதால் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகவே பார்க்கப்படுகிறது.

முன்னதாக செப்டம்பரில், சிறிய அரசியல் காரணங்களால் தான் காங்கிரஸ் கட்சியை விட்டு விலகுவதாக ஊர்மிளா அறிவித்தார். "எனது அரசியல் மற்றும் சமூக உணர்வுகள் கட்சியில் உள்ள அதிகாரங்கள் புறக்கணிக்கிறது. ஒரு பெரிய வேலை செய்வதற்குப் பதிலாக உட்கட்சி பூசலை எதிர்த்துப் போராடுவதற்கான சூழல் ஏற்பட்டுள்ளது. மும்பை காங்கிரசில் இலக்கை எட்ட முயன்று ஏமாற்றங்களுடன் விடைபெறுகிறேன்" என ஊர்மிளா தனது விலகல் குறித்து குறிப்பிட்டு இருந்தார்.

மேலும் மே 16 அன்று மும்பை முன்னாள் காங்கிரஸ் தலைவர் மிலிந்த் தியோராவுக்கு எழுதிய கடிதத்தில் அவர் எழுப்பிய கவலைகளை கவனிக்கவில்லை என்று மாடோண்ட்கர் குற்றம் சாட்டினார்.

மும்பை காங்கிரஸ் பொறுத்தவரையில்., கடந்த சில தினங்களாக பல்வேறு சிக்கல்களை சந்தித்து வருகிறது. கட்சியின் தலைமையை தேர்ந்தெடுப்பதில் துவங்கி பல இன்னல்களை சந்தித்து வருகிறது. அந்த வகையில் உர்மிளா விலகல் ஏற்படுத்திய சர்ச்சை காங்கிரஸாரை பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் மும்பை வடக்கிலிருந்து உர்மிளா மாடோண்ட்கர் போட்டியிட்டார், எனினும் பாஜக-வின் கோபால் ஷெட்டியிடம் தோல்வியை தழுவினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News