ஒரே நாடு ஒரே தேர்தல்: அரசியல் கட்சிகளிடம் கருத்துக் கேட்புக் கூட்டம்!

மக்களவை மற்றும் சட்டபெரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது குறித்து முக்கிய அரசியல் கட்சிகளுடன் கருத்து கேட்புக் கூட்டம் இன்று நடைபெறுகிறது! 

Last Updated : Jul 7, 2018, 09:35 AM IST
ஒரே நாடு ஒரே தேர்தல்: அரசியல் கட்சிகளிடம் கருத்துக் கேட்புக் கூட்டம்! title=

மக்களவை மற்றும் சட்டபெரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது குறித்து முக்கிய அரசியல் கட்சிகளுடன் கருத்து கேட்புக் கூட்டம் இன்று நடைபெறுகிறது! 

நாடாளுமன்றத்துக்கும், மாநில சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்திற்கான ஆதரவும் எதிர்ப்பும் நிலையாக உள்ள நிலையில், இது குறித்து முக்கிய அரசியல் தலைவர்களிடம் கருத்து கேட்கும் கூட்டம் இன்று துவங்குகிறது.  

இந்நிலையில், ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது குறித்து கருத்தொற்றுமையை உருவாக்க அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்த சட்ட ஆணையம் திட்டமிட்டுள்ளது. டெல்லியில், 7 மற்றும் 8-ந் தேதிகளில் ஆலோசனை கூட்டம் நடக்கிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க வருமாறு அங்கீகரிக்கப்பட்ட 7 தேசிய கட்சிகள் மற்றும் 59 மாநில கட்சிகளுக்கு சட்ட ஆணையம் கடிதம் எழுதி உள்ளது. 

இந்த நிலையில், இது தொடர்பான கருத்து கேட்பு ஆலோசனை கூட்டம் டெல்லி கான்மார்க்கெட்டில் உள்ள லோக்நாயக் பவனில், இன்றும் நாளையும் நடைபெற உள்ளது. முதல் நாள் கூட்டத்தில் முக்கிய அரசியல் கட்சித்தலைவர்களின் தலைவர்கள் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களை முன்வைக்க உள்ளனர்.  அதிமுக சார்பில், மக்களவை துணை சபாநாயகர் மு. தம்பிதுரை, அக்கட்சியின் நாடாளுமன்றக்குழு தலைவர் பி.வேணுகோபால், தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி சண்முகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டு அதிமுகவின் நிலைப்பாட்டை தெரிவிக்க உள்ளனர். 

இந்த ஆலோசனைக்கூட்டத்தில், பாஜக, காங்கிரஸ் கட்சிகள் கலந்து கொள்வது இன்னும் உறுதியாகவில்லை. இரு கட்சிகளின் சார்பில் பங்கேற்பவர்கள் யார்? என்ற தகவல் இன்னும் வெளியிடப்படவில்லை. இதனால், இருகட்சிகளும் புறக்கணிக்க உள்ளதா? என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகவும் ஆங்கில ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. 

 

Trending News