நாளை ஆளுநரை சந்திக்கும் பகவந்த் மான்...ஆட்சி அமைக்க உரிமை கோருகிறார்..

பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி மாபெரும் வெற்றி பெற்றுள்ள நிலையில், முதலமைச்சர் வேட்பாளரான பகவந்த் மான் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை நாளை நேரில் சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோருகிறார்

Written by - Chithira Rekha | Edited by - அதிரா ஆனந்த் | Last Updated : Mar 11, 2022, 03:43 PM IST
  • பஞ்சாபில் ஆட்சி அமைக்கும் ஆம் ஆத்மி
  • நாளை ஆளுநரை சந்தித்து உரிமை கோரும் பகவந்த் மான்
  • இன்று மாலை கெஜ்ரிவாலுடன் சந்திப்பு
நாளை ஆளுநரை சந்திக்கும் பகவந்த் மான்...ஆட்சி அமைக்க உரிமை கோருகிறார்.. title=

117 தொகுதிகளைக் கொண்ட பஞ்சாப் சட்டப்பேரவைக்கு கடந்த 20-ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை முடிவுகள் நேற்று வெளியாகின. இதில், 92 இடங்களில் வெற்றி பெற்று ஆம் ஆத்மி கட்சி ஆட்சியை பிடித்துள்ளது. 2017 தேர்தலில் 34 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்த ஆம் ஆத்மி இம்முறை 90-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அக்கட்சியின் முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பகவந்த் மான், துரி தொகுதியில் 58,206 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

ஆம் ஆத்மி கட்சியின் 2-வது முதலமைச்சர் என்ற பெருமையை பகவந்த் மான் பெற்றுள்ளார். ஆளுநர் மாளிகையை விடுத்து சுதந்திர போராட்ட வீரர் பகத்சிங் பிறந்த கட்கர் கலன் கிராமத்தில் தனது பதவியேற்பு விழா நடைபெறும் எனத் தெரிவித்த பகவந்த் மான், பஞ்சாப் அரசு அலுவலகங்களில் இனி முதலமைச்சர் படம் இடம் பெறாது எனவும் பகத்சிங் மற்றும் அம்பேத்கர் படங்களே இடம்பெறும் எனவும் கூறியுள்ளார்.

மேலும் படிக்க | வேட்பாளர்களை ரிசார்ட்களில் தங்க வைத்த காங்கிரஸ், ஆம் ஆத்மி...தொடங்கியது அரசியல் ஆட்டம்

இதனைத் தொடர்ந்து நாளை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்திக்கும் பகவந்த் மான் ஆட்சியமைக்க உரிமை கோருகிறார். முன்னதாக, இன்று மாலை டெல்லி செல்லும் அவர் டெல்லி முதலமைச்சரும், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவாலை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார். 

மேலும் படிக்க | 2024ஆம் ஆண்டு மக்களவை தேர்தல் முடிவுகளை தீர்மானிக்கும் 5 மாநில தேர்தல் முடிவுகள்..!

பகவந்த் சிங் மான் தனது தாயுடன் உள்ள புகைப்படத்தை பதிவிட்டு, கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் வாழ்த்து தெரிவித்துள்ளார். நகைச்சுவை நடிகராக இருந்த பகவந்த் மான், 2014-ம் ஆண்டு ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தார். 2014, 2019 நாடாளுமன்றத் தேர்தல்களில் சங்ரூர் தொகுதியில் வெற்றி பெற்ற பகவந்த் மான், 2017-ம் ஆண்டு சட்டப்பேரப்பேரவை தேர்தலுக்குப் பிறகு ஆம் ஆத்மி கட்சியின் பஞ்சாப் மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்டார். 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News