டெல்லி நாடாளுமன்ற வளாகத்திற்குள் கத்தியுடன் நுழைய முயன்ற நபர் கைது!

டெல்லி நாடாளுமன்ற வளாகத்திற்குள் கத்தியுடன் நுழைய முயன்ற நபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்!!

Last Updated : Sep 2, 2019, 11:54 AM IST
டெல்லி நாடாளுமன்ற வளாகத்திற்குள் கத்தியுடன் நுழைய முயன்ற நபர் கைது! title=

டெல்லி நாடாளுமன்ற வளாகத்திற்குள் கத்தியுடன் நுழைய முயன்ற நபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்!!

அத்துமீறி நாடாளுமன்றத்திற்குள் செல்ல முயற்சித்த நபரை பாதுகாப்புப்படையினர் தடுத்து நிறுத்தியுள்ளனர். சந்தேகத்திற்கு உரிய நபரை பாதுகாப்பு படையினர் கைது செய்துள்ளதாக வட்டாரங்கள் ஜீ மீடியாவிடம் தெரிவித்தன. சந்தேகத்திற்குறிய நபர் கையில் கத்தியை ஏந்தியிருந்தார். சந்தேகநபர் சிறையில் அடைக்கப்பட்ட தேரா சச்சா சவுதா தலைவரும், கற்பழிப்பு குற்றவாளியுமான ராம் ரஹீமின் ஆதரவாளர் என்று வட்டாரங்கள் தெரிவித்தன. சந்தேக நபர் ஒரு பைக்கில் பாராளுமன்ற கட்டிடத்தின் கேட் எண் 1 க்கு அருகில் வந்துள்ளார். 

இதையடுத்து, அந்த நபரை கைது செய்து பாராளுமன்ற வீதி காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். அங்கு தற்போது மூத்த போலீஸ் அதிகாரிகள் குழு அவரை விசாரித்து வருகிறது.

அத்துமீறலில் ஈடுபட்டவர் டெல்லியின் லட்சுமி நகரில் வசித்து வரும் சாகர் என அடையாளம் காணப்பட்டுள்ளது. நேரில் கண்ட சாட்சிகளின் கூற்றுப்படி, அந்த நபர் தனது பைக்கை கேட் எண் 1 இல் நிறுத்தி, கையில் கத்தியுடன் பாராளுமன்ற வளாகத்திற்குள் நுழைய முயன்றார். ராம் ரஹீமுக்கு ஆதரவாக கோஷங்களை எழுப்பியபோது, பாதுகாப்பு படையினர் அவரை தடுத்து தில்லி போலீசில் ஒப்படைத்தனர். இந்த சம்பவத்தால் பாகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  

 

Trending News