போதை பொருள் விவகாரம்; சிக்கிலில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் கான் மகன்..!!!

இந்தி திரைப்பட உலகில் சூப்பர் ஸ்டார் என வர்ணிக்கப்படும் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் பெரும் சிக்கலில் சிக்கியுள்ளார்.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Oct 3, 2021, 01:47 PM IST
போதை பொருள் விவகாரம்; சிக்கிலில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் கான் மகன்..!!! title=

இந்தி திரைப்பட உலகில் சூப்பர் ஸ்டார் என வர்ணிக்கப்படும் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் பெரும் சிக்கலில் சிக்கியுள்ளார். ஆர்யன் கான் போதை பொருள் விவகாரத்தில் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் என கூறப்படுகிறது. நேற்றிரவு மும்பை கடல்பரப்பில் உல்லாசக் கப்பலில் நடைபெற்ற போதைப் பொருள் பார்ட்டி நடத்திய விவகாரத்தில் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள், ஆர்யன் கானின் மொபைல் போனை பறிமுதல் செய்துள்ளனர் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தொலைபேசியின் உள்ள மெஸ்சேஜ்கள் மூலம் அவர் போதைப்பொருட்களை ஆர்டர் செய்வதையும் உட்கொள்வதற்கும் ஆன ஆதாரங்கள் கிடைத்துள்ளதால், அவர் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் என கூறப்படுகிறது. 

இந்நிலையில், தான் விஐபி என்ற முறையில் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளத்தான் இங்கு சென்றதாகவும், போதைப் பொருள் விவகாரத்தில் தனக்கு தொடர்பில்லை எனவும் ஆர்யன் தரப்பில் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

பாலிவுட் நடிகர் ஷாருக் கான் - கவுரி கான் தம்பதியரின் முதல் மகன் தான் ஆர்யன் கான் என்பது குறிப்பிடத்தக்கது. ஆர்யன் கானுக்கு சுகானா கான் என்ற தங்கையும், அப்ராம் என்ற தம்பியும் இருக்கிறார். 

இங்கே மேலும் ஏழு பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் மேலும் இந்த வழக்கில் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. என்சிபி அதிகாரிகள் முன்முன் தமேச்சா, நுபுர் சரிகா, இஸ்மீத் சிங், மொஹக் ஜஸ்வால், விக்ராந்த் சோக்கர், கோமித் சோப்ரா மற்றும் அர்பாஸ் வணிகரை விசாரித்து வருகின்றனர்.

ALSO READ | நிழலுக தாதா தாவூத் இப்ராஹிமின் சகோதரர் போதைப்பொருள் வழக்கில் கைது

மும்பையில் இருந்து சனிக்கிழமை இரவு புறப்பட்டஉல்லாச கப்பலில் சோதனை நடத்திய போதை தடுப்பு பிரிவு, கப்பலில் இருந்தவர்களிடமிருந்து கோகோயின், எல்எஸ்டி, ஹஷிஷ் மற்றும் எம்.டி போன்ற பல விதமான போதைப்பொருட்களைக் கைப்பற்றியது. தில்லியைச் சேர்ந்த நிறுவனம் விருந்துக்கு தேவையான போதை பொருளை சப்ளை செய்ததாகவும், சில போதைப் பொருட்கல் ஆன்லைன் மூலம் வாங்கப்பட்டதாகவும் கூறப்படுகின்றன.

கப்பலில் மற்ற பிரபலங்களும் இருந்தனர், ஆனால் போதைப்பொருள் இல்லாதாவர்கள் யாரும் கைது செய்யப்படவில்லை" என்று ஒரு உயர்மட்ட வட்டாரங்கள் தெரிவித்தன.

பாலிவிட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் ஜூன் மாதத்தில் இறந்த பிறகு பாலிவுட்டில் போதைப்பொருள் பயன்படுத்தப்பட்டதாக NCB விசாரணையைத் தொடங்கியது. போதைப்பொருள் சம்பந்தப்பட்ட வாட்ஸ்அப் சாட்களின் அடிப்படையில் முன்னதாக, ராஜ்புத்தின் நண்பர், நடிகை ரியா சக்ரவர்த்தி, அவரது சகோதரர் ஷோவிக், மறைந்த பாலிவுட் நடிகரிடம் பணியாற்றிய ஊழியர்கள் மற்றும் சிலரை போதை மருந்து மற்றும் மனோவியல் பொருட்கள் (Narcotic Drugs and Psychotropic Substances (NDPS) Act) சட்டத்தின் கீழ் கைது செய்தது. குற்றம் சாட்டப்பட்ட ரியா சக்கரவர்த்தி மற்றும் வேறு சில குற்றவாளிகள் தற்போது ஜாமீனில் உள்ளனர்.

ALSO READ | முதுமலை ஆட்கொல்லி புலி மாயம்; மக்கள் மத்தியில் பதற்றம்..!!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News