கர்ப்பமானதையே அறியாமல் இருந்த இளம் பெண்.. திடீரென கழிப்பறையில் பிரசவம்..!!

பிரசவத்திற்குப் பிறகு, அமி தனது மகனை கழிப்பறையிலிருந்து எடுத்து, குழந்தையை எடுத்துக் கொண்டு, தனது தாயான பெக்கியை நோக்கி ஓடினார். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 23, 2020, 11:10 PM IST
  • அமி ஸ்டீவன்ஸ் நள்ளிரவில் கழிப்பறையில் உட்கார்ந்திருக்கும் போது,‘திடீர் தனது வயிறு லேசானதை’ உணர்ந்ததாக கூறினார்.
  • அதிர்ஷ்டவசமாக, தாய் மற்றும் குழந்தை இருவரும் ஆரோக்கியமாக இருந்தனர்,
கர்ப்பமானதையே அறியாமல் இருந்த இளம் பெண்.. திடீரென கழிப்பறையில் பிரசவம்..!! title=

தான் கர்ப்பமானதையே அறியாத 17 வயது சிறுமி கழிவறையில் குழந்தையை  பெற்றெடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வினோதமான ஒரு நிகழ்வில், இங்கிலாந்தைச் (England)  சேர்ந்த 17 வயது சிறுமி, கடந்த ஆண்டு கழிவறையில் தனது ஆண் குழந்தையை எவ்வாறு பெற்றெடுத்தாள் என்பதை வெளிப்படுத்தியுள்ளார், தான் கர்ப்பமாக இருப்பதைக் கண்டுபிடித்த மூன்று நாட்களுக்குப் பிறகு, அமி ஸ்டீவன்ஸ் நள்ளிரவில் கழிப்பறையில் உட்கார்ந்திருக்கும் போது,‘திடீர் தனது வயிறு லேசானதை’ உணர்ந்ததாக கூறினார். அவள் கீழே பார்த்தபோது, ​​ஒரு குழந்தையின் கால்கள் மற்றும் கழிவறையிலிருந்து வெளியே வருவதைக் கண்டு அவள் அதிர்ச்சியடைந்தாள்.

மூன்று மாத கருத்தடை ஊசி போடுவதற்கான வழக்கமான பரிசோதனைக்காக சென்ற போது, ​​அவர் ஐந்து அல்லது ஆறு வார கர்ப்பிணியாக இருந்திருக்கலாம் என்பது தெரிய வந்தது. இருப்பினும், அவருக்கு இது தெரிய வந்த 3 நாட்களுக்குப் பிறகு, அவருக்கு எதிர்பாராத விதமான இந்த பிரசவம் பெரும் அதிர்ச்சியாக இருந்தது என்று மெட்ரோ யுகே தெரிவித்துள்ளது.

பிரசவத்திற்குப் பிறகு, அமி தனது மகனை கழிப்பறையிலிருந்து எடுத்து, குழந்தையை எடுத்துக் கொண்டு, தனது தாயான பெக்கியை நோக்கி ஓடினார். அவரது தாயார் தொப்புள் கொடியை ஒரு துணியால் கட்டினார். பின்னர் அவரது தாயார் ஆம்புலன்ஸை அழைத்தார்.

அதிர்ஷ்டவசமாக, தாய் மற்றும் குழந்தை இருவரும் ஆரோக்கியமாக இருந்தனர், மேலும் மூன்று நாட்கள் மட்டுமே மருத்துவமனையில் இருக்க வேண்டியிருந்தது. அமீயின் ஆண் குழந்தை பிறக்கும் போது 2.3 கிலோ எடை கொண்டதாக இருந்தது.

கருத்தடை ஊசி பயன்படுத்துவதன் காரணமாக, தனக்கு மாத விடாய் நின்றதால், அதை பற்றி கவனம் செலுத்தவில்லை என அவர் கூறினார். குழந்தை பிறந்த அந்த் அ இரவை நினைத்தால் தனக்கு மிகவும்குழப்பமாக இருப்பதாகவும், ஆனால் குழந்தை தன்னை பார்த்து சிரிக்கும் போது தனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் அவர் கூறினார். 

ALSO READ | சீனப்பெருஞ்சுவர் 'உலகின் மிகப்பெரிய கல்லறை' என அழைக்கப்படும் மர்மம் என்ன..!!!

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News