உங்கள் புத்தி கூர்மையை கண்டு பிறர் வியக்க சில எளிய ஜோதிட பரிகாரங்கள்..!!

இன்றைய கால கட்டத்தில், பரபரப்பான வாழ்க்கை, வேலைப்பளு,  என இடைவிடாமல் ஓடிக் கொண்டிருக்கும் ஒருவரின் மனதும் மூளையும் எளிதில் சோர்வடைகிறது. 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Feb 15, 2022, 02:50 PM IST
  • புத்திசாலித்தனத்தை அதிகரிக்க ஜபிக்க வேண்டிய மந்திரம்.
  • புதன் மற்றும் சூரியனின் சேர்க்கை புதாதித்ய யோகத்தை உருவாக்குகிறது.
  • மன அழுத்தம், போதுமான தூக்கமின்மை ஆகியவை நினைவாற்றலை குறைத்து விடுகிறது
உங்கள் புத்தி கூர்மையை கண்டு பிறர் வியக்க சில எளிய ஜோதிட பரிகாரங்கள்..!! title=

இன்றைய கால கட்டத்தில், பரபரப்பான வாழ்க்கை, வேலைப்பளு,  என இடைவிடாமல் ஓடிக் கொண்டிருக்கும் ஒருவரின் மனதும் மூளையும் எளிதில் சோர்வடைகிறது. அதனால் ஏற்படும் மன அழுத்தம், போதுமான தூக்கமின்மை ஆகியவை நினைவாற்றலை குறைத்து விடுகிறது. மறதி பிரச்சனை என்பது அனைவருக்கும் உள்ள பொதுவான பிரச்சனை என ஆகிவிட்டது. போட்டி நிறைந்த உலகத்தில் வேகமாக இயங்கினால் தான் இலக்கை அடைய முடியும். 

எனவே கூர்மையான புத்தி மற்றும் நல்ல நினைவாற்றல் மிகவும் அவசியம். இதனை பெற பாதாம் போன்ற மூளை ஆரோக்கியத்திற்கான உணவுகளை சாப்பிட வேண்டும் எனப்தை தவிர, ஜோதிட சாஸ்திரத்தில், மூளை கூர்மைக்கு சில பிரத்யேக பரிகாரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

புத்திசாலித்தனத்தை அதிகரிக்க ஜபிக்க வேண்டிய மந்திரம்

புதன் கிரகம் புத்திசாலித்தனம், அறிவாற்றல் ஆகியவற்றின் காரணியாகும். புத பகவானின் கருணை இருந்தால், கூர்மையான அறிவாற்றலை பெறலாம். இதனுடன்,  பிறரை பேச்சால் கவரும் திறனும் அதிகரிக்கும். அபாரம். ஜாதகத்தில் புதன் வலுவாக இருக்கவும் புத்தி மற்றும் ஞாபக சக்தியை அதிகரிக்க, புத பகவானின் மந்திரங்களான

‘ஓம் ப்ராம் பிரிம் ப்ரௌன் சஹ புதாய நமஹ', அல்லது

'ஓம் பும் புதாய நமஹ' அல்லது 

'ஓம் ஐம் ஸ்ரீம் ஸ்ரீம் புதாய நமஹ' 

ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை தினமும் 108 முறை உச்சரிக்கவும். சில நாட்களில் வித்தியாசம் தெரியும். 

இது தவிர, துர்கா சப்தஷதி  மந்திரமான

ஓம் ஹ்ரீம் க்லீம் மஹாசரஸ்வதி தேவ்யை நமஹ

என்ற மந்திரத்தை உச்சரிப்பதும் ஒருவரை கூர்மையான புத்திசாலியாக மாற்றுகிறது.

மேலும் படிக்க | Personality by Zodiac Sign: தங்கள் தலைவிதியை மாற்றும் திறன் பெற்ற ‘5’ ராசிகள்..!!

புதனுடன் வாழ்க்கையில் வெற்றியைத் தரும் கிரகமான  சூரியனையும் வணங்கினால்,  வாழ்க்கையில் புத்தி கூர்மையினால்,  உயர் பதவியைப் பெறலாம். புதன் மற்றும் சூரியனின் சேர்க்கை புதாதித்ய யோகத்தை உருவாக்குகிறது. எனவே, வாழ்வில் அனைத்து வேலைகளிலும் வெற்றி பெற, சூரியனையும் புதனுடன் சேர்த்து வழிபடவும். மேலும், விநாயகப் பெருமான் ஞானத்தின் கடவுளாகக் கருதப்படுகிறார். விநாயகருக்கு அருகம்புல் கொண்டு தொடர்ந்து புஜித்து வந்தால், புத்தி கூர்மையாகி, நினைவாற்றல் அதிகரிக்கத் தொடங்குகிறது.

பச்சை பொருட்களை தானம் செய்வதும்அறிவுத்திறனை அதிகரிக்கும். பச்சை நிற ஆடைகள், பச்சை பயறு, கீரை போன்ற புதனுடன் தொடர்புடைய பொருட்களை தானம் செய்யலாம். பசுவிற்கு பயறு, கீரை போன்றவற்றை உனவாக அளிக்கலாம்

ஜாதகத்தில் புதன் வலுப்பெற மரகதக் கல்லையும் அணியலாம். இதனால் புத்தி கூர்மை அதிகரிப்பதோடு, வியாபாரத்திலும் லாபம் உண்டாகும். ஆனால் ரத்தினத்தை அணிவதற்கு முன், ஒரு நிபுணரை அணுகி ஆலோசிக்கவும்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS அதை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | இந்த 5 ராசிக்காரர்களுக்கு திடீர் பணவரவு உண்டாகும்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News