உணவில்லாதவர்களுக்கு உணவு! குஜராத்தின் ரொட்டி வங்கி!

பசியுடன் யாரும் உறங்கக்கூடாது என்ற கருணையின் அடிப்படையில் குஜராத்தின் ராஜ்கோட்டில் ரொட்டி வங்கி உணவில்லாதவர்களுக்கு உணவு வழங்குகிறது. 

Last Updated : May 18, 2019, 11:39 AM IST
உணவில்லாதவர்களுக்கு உணவு! குஜராத்தின் ரொட்டி வங்கி!  title=

பசியுடன் யாரும் உறங்கக்கூடாது என்ற கருணையின் அடிப்படையில் குஜராத்தின் ராஜ்கோட்டில் ரொட்டி வங்கி உணவில்லாதவர்களுக்கு உணவு வழங்குகிறது. 

குஜராத்தின் ராஜ்கோட்டில் ரொட்டி வங்கி ஒன்று அறக்கட்டளையின் பேரால் செயல்பட்டு வருகிறது. இங்கு அக்கம் பக்கம் உள்ள மருத்துவமனைகளுக்கும் சென்று சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கும் இவர்கள் உணவு பரிமாறுகின்றனர். இந்த ரொட்டி வங்கி உணவில்லாதவர்களுக்கு உணவு வழங்குகிறது.

இதுபோன்ற ரொட்டி வங்கிகள் ஏற்கனவே பீகார் மற்றும் பஞ்சாபில் செயல்பட்டு வருவது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் தற்போது இந்த ரொட்டி வங்கி குஜராத்திலும் தொடங்கியதாக அதன் அறங்காவலரான உபாத்யாயா கூறியுள்ளார்.

வாகனம் வைத்துக் கொண்டு வீடு வீடாக சென்று உணவுப் பொருட்களை சேகரித்து வருவதாக தெரிவித்த அவர், தினமும் 300 சப்பாத்திகளை திரட்ட முடிவதாக தெரிவித்துள்ளார். 

Trending News