குளிர்காலத்தில் குழந்தைகளை எப்படி ஆரோக்கியமாக பாதுகாப்பது? ஹெல்த் டிப்ஸ்

குளிர்காலத்தில் குழந்தைகளுக்கு பனி தங்காமல் இருக்க எப்படி அவர்களை பாதுகாப்பாக வைத்துகொள்வது என்று பார்ப்போம்.

Written by - Shiva Murugesan | Last Updated : Jan 22, 2019, 08:51 PM IST
குளிர்காலத்தில் குழந்தைகளை எப்படி ஆரோக்கியமாக பாதுகாப்பது? ஹெல்த் டிப்ஸ் title=

குளிர்காலம் அல்லது பனிக்காலம் (Winter) என்பது இலையுதிர்காலத்திற்கும், இளவேனில்காலத்திற்கும் இடையில் வரும் பருவ காலம் ஆகும். இந்தக் காலங்களில் இரவு நேரம் அதிகமாகவும், பகல் நேரம் குறைவாகவும் இருக்கும். இந்தியாவை பொருத்த வரை டிசம்பர் முதல் பிப்ரவரி வரை குளிர்காலத்திற்குரிய காலநிலை நிலவும்.

இந்தியாவை பொருத்த வரை வட மாநிலங்களில் தான் அதிக அளவில் குளிர் இருக்கும். பனிபொழிவு ஏற்படும். ஆனால் தமிழகத்தில் அவ்வளவாக இருக்காது. இந்தமுறை தமிழகத்திலும் பல இடங்களில் குளிர் ஏற்ப்பட்டு உள்ளது. சில இடங்களில் 0 டிகிரி அளவுக்கு வெப்பநிலை இருந்தது. எனவே குளிர்காலத்தில் குழந்தைகளுக்கு என்ன பிரச்சனைகள் ஏற்ப்படும். அவற்றை எப்படி சமாளிப்பது என்பதைக் குறித்து பார்ப்போம். 

குளிர் காலத்தில் குழந்தைகளுக்கு காது, மூக்கு, தொண்டையை போன்ற பகுதிகளில் தொற்று நோய்கள் எளிதில் தாக்கும். இதற்கு காரணம் குழந்தைகளுக்கு எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பது தான். குறிப்பாக இரவு முதல் அதிகாலை வரை குளிரின் தாக்கம் அதிகம் இருப்பதால், இதற்கு இடைப்பட்ட நேரத்தில் மூச்சு திணறல், சளி என பிரச்னைகள் குழந்தைகளுக்கு துவங்கும். குழந்தைகளுக்கு எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் பட்சத்தில், இது காய்ச்சலாக மாறும்.

எனவே குளிர் அதிகமாக இருக்கும் நேரங்களில் குளிர் தாக்காத வண்ணம் காதுகளை நன்றாக மூடி வைத்துக்கொள்ள வேண்டும். குளிர் காலத்தில் எளிதில் தாகம் எடுக்காது. ஆனாலும், போதிய அளவுக்குத் தண்ணீர் குடிக்க வேண்டும். தொண்டை வறண்டு போகாமல் பாத்துக்கொள்ள வேண்டும். குளிர் காலத்தில் வெந்நீர் அருந்துவது உடலுக்கு மிகவும் சிறந்தது. இதன்மூலம் சளி, இரும்பல் போன்ற பிரச்சனைகள் வராது.

குளிர்சாதனப் பெட்டியில் வைத்த உணவுப் பொருட்களை நேரடியாக எடுத்து சாப்பிடக் கூடாது. அதை சூடு செய்தோ அல்லது தட்ப வெட்பத்துக்கு அவை வந்ததும் சாப்பிட வேண்டும். 

குறிப்பாக குளிர் காலத்தில் உதடு வெடிப்பு அதிக அளவில் ஏற்ப்படும். அவற்றை தவிர்க்க நெய் அல்லது எண்ணெய்யை உதட்டில் பூசுங்கள். அதேபோல வறண்ட சர்மம் உள்ளவர்கள் தோலில் ஏற்ப்படும் வறட்சியை தடுக்க ஆலிவாயில் அல்லது தேங்காய் எண்ணெய் பூசி குளித்து வந்தால் சர்மம் சீராக இருக்கும். 

முக்கியமாக குளிர்காலத்தில் நமக்கு பிரச்சினைகள் ஏற்படாமல் இருக்க உணவில் கவனம் செலுத்த வேண்டும். காய்கறிகள், ஒமேகா 3 நிறைந்த மீன்கள், சிறுதானியங்கள், பாதாம், வேர்கடலை, தேன், போன்றவற்றை கூடுதலாக உணவில் சேர்த்துக்கொள்வதால் உடலில் உள்ள வெள்ளை ரத்த அணுக்கள் செயல் திறன் பெற்று, நோய் எதிர்ப்பு சக்தியை உடலில் உருவாக்கும்.

Trending News