தினசரி நாம் பயன்படுத்தும் உப்பில் இத்தனை நன்மையா?...

நம் வாழ்வில் தினசரி பயன்படுத்தப்படும் பொருட்களில் ஒன்று உப்பு. ஆனால் உப்பு உணவுக்கு மட்டுமல்ல, பல விஷயங்களுக்கும் பயன்படுத்தப்படுகிறது என்று நீங்கள் எப்போதாவது நினைத்திருக்கிறீர்களா? 

Last Updated : Jan 8, 2020, 08:59 PM IST
தினசரி நாம் பயன்படுத்தும் உப்பில் இத்தனை நன்மையா?... title=

நம் வாழ்வில் தினசரி பயன்படுத்தப்படும் பொருட்களில் ஒன்று உப்பு. ஆனால் உப்பு உணவுக்கு மட்டுமல்ல, பல விஷயங்களுக்கும் பயன்படுத்தப்படுகிறது என்று நீங்கள் எப்போதாவது நினைத்திருக்கிறீர்களா? 

அதாவது, நம் வாழ்வில் ஏற்படும் பல அடிப்படை பிரச்சினைகளை தீர்க்க உப்பைப் பயன்படுத்தலாம் என்பதை இந்த பதிவு கூறுகிறது.

பழங்களை நீண்ட நேரம் புதியதாக வைத்திருக்கிறது: பழங்கள் அழுகுவதை உப்பு தடுக்கிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆம், உப்பு பழங்கள் அழுகுவதைத் தடுக்கிறது. ஆப்பில் போன்ற பழங்களை வெட்டியப்பின், அது கருமையாகத் தொடங்குகிறது, எனவே இந்த பழங்களை புதிதாக வைத்திருக்க அதன் மீது சிறிது உப்பு தெளிக்கப்படுகிறது. இதன் காரணமாக பழங்கள் விரைவாக கெட்டுப் போகாமல் பாதுகக்கப்படுகிறது.

கைகளிலிருந்து வரும் வாசனையை அகற்ற: கைகளிலிருந்து வரும் வாசனையால் நீங்கள் தொந்தரவு அடைந்தால், உங்கள் கையில் உப்பினை சற்று எடுத்து தேய்த்து அந்த வாசனையினை நீங்கள் போக்கலாம். அதாவது, வெங்காயம் மற்றும் பூண்டு போன்றவற்றை நாம் சமையலின் போது பயன்படுத்தும் போது கைகளில் வாசனை ஒட்டிக்கொள்கிறது. இந்த வாசனையினை போக்க உப்பு பயன்படுத்தப்படுகிறது.

துணிகளில் இருந்து கறைகளை நீக்க: உங்கள் துணிகளில் கறை படிந்திருந்தால், உப்புடன் கறைகளை எளிதாக அகற்றலாம். இதற்காக, உங்கள் ஆடையை உப்பு நீரில் ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். கூடுதலாக, இது ஆடைகளின் நிறமாற்றத்தை மீண்டும் பிரகாசமாக்குகிறது.

மடுவை(sink) சுத்தம் செய்ய: பிடிவாதமான கறைகள் மடுவிலிருந்து வெளியே வரவில்லை என்றால், அதை சுத்தம் செய்வதற்காக, சிறிது வெதுவெதுப்பான நீரில் உப்பு கலந்து, மடுவில் ஊற்றவும். இது மடுவில் உள்ள எண்ணெய் கறைகளை எளிதில் சுத்தம் செய்யும்...

Trending News