பத்தாம் வகுப்பு தேர்வு எழுத பள்ளிக்கு குதிரையில் சென்ற மாணவி: WATCH

கேரளாவில் பத்தாம் வகுப்பு தேர்வு எழுத பள்ளிக்கு மாணவி குதிரையில் சென்ற சம்பவம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது!!

Last Updated : Apr 8, 2019, 02:23 PM IST
பத்தாம் வகுப்பு தேர்வு எழுத பள்ளிக்கு குதிரையில் சென்ற மாணவி: WATCH title=

கேரளாவில் பத்தாம் வகுப்பு தேர்வு எழுத பள்ளிக்கு மாணவி குதிரையில் சென்ற சம்பவம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது!!

இந்த பரந்த உலகை சுற்றி எத்தையோ விசித்திறான நிகழ்வுகள் நடக்கின்றனர். அவைகளில் சில சம்வம் நம்மை அதிர்ச்சியில் ஆழ்த்தும், சிலை நகைச்சுவையிலும் ஆழ்த்தும். மனிதனாய் பிறந்த அனைவருக்கு குதிரை, யானை மீது சவாரி செய்வது பிடித்தமான நிகழ்வு ஒன்று. குதிரை சவாரி செய்வதற்கு குழந்தை முதல் முதியவர்கள வரை அனைவரும் விரும்புவார்கள். இந்நிலையில், கேரளாவில் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதுவதற்காக ஒரு சிறுமி குதிரையில் செல்லும் வீடியோ சமூக வலைத்தளங்களில் பலத்த வரவேற்பை பெற்றுள்ளது.

திரிச்சூர் மாவட்டத்தைச் சேர்ந்த அச்சிறுமி தோளில் பையை சுமந்து கொண்டு, குதிரையில் சவாரி செய்தார். எவ்வித பயமும் இன்றி துணிச்சலுடன் கம்பீரமாக குதிரையில் சவாரி செய்து பள்ளி சென்று சேர்ந்தார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் ஆர்வத்துடன் பார்க்கப்படுவதுடன் வேகமாக பரப்பப்பட்டும் வருகிறது. இந்த வீடியோ பதிவு பெண் திறமையை அழகாக எடுத்துரைக்கிறது. 

இந்தச் சிறுமியை கதாநாயகி எனக் கூறியுள்ள மகிந்திரா குழுமத்தலைவர் ஆனந்த் மகிந்திரா, சிறுமியின் புகைப்படத்தை ஸ்கிரீன் சேவராக வைக்க விரும்புவதாகத் தெரிவித்துள்ளார். 

இந்த பெண்ணை அவரது 'ஹீரோ' என்று கூறி, அந்த பெண்மணியின் இடத்தை பகிர்ந்து கொள்ள சமுதாய ஊடகங்களில் மக்கள் கேட்டார்.

சமூக ஊடகங்களில் வீடியோ பகிர்ந்து கொள்ளப்பட்ட உடனேயே, இந்த பெண்ணின் தைரியத்தை பாராட்டி மக்கள் தங்களின் பாராட்டுக்களை தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர். 

 

Trending News