CBSE papers leak: "Exam Warriors 2" புத்தகம் எழுதுவாரா மோடி?- ராகுல் நக்கல்!

சிபிஎஸ்இ வினாத்தாள் கசிந்தது தொடர்பாக, பிரதமர் மோடி 2-வது புத்தகம் எழுதுவாரா என்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி நக்கல் அடித்துள்ளார்.

Last Updated : Mar 30, 2018, 04:39 PM IST
CBSE papers leak: "Exam Warriors 2" புத்தகம் எழுதுவாரா மோடி?- ராகுல் நக்கல்! title=

சிபிஎஸ்இ வினாத்தாள் கசிந்தது தொடர்பாக, பிரதமர் மோடி 2-வது புத்தகம் எழுதுவாரா என்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி நக்கல் அடித்துள்ளார்.

சிபிஎஸ்இ பிளஸ்2 பொருளாதார பாடம் மற்றும் 10வது வகுப்பு கணித பாட தேர்வுக்கான வினாத்தாள்கள் கசிந்ததால், இவர் இரண்டு பாடத்துக்கும் மறுதேர்வு நடத்தப்படும் என கடந்த மார்ச் 28-ம் தேதி சிபிஎஸ்இ அறிவித்து இருந்தது. 

இந்நிலையில், வினாத்தாள் கசிந்தது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி இன்று தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, தேர்வு நேரத்தில் மன அழுத்தம் இல்லாமல் இருப்பது எப்படி என்று மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் உதவும் வகையில் "Exam Warriors" என்ற புத்தகத்தை பிரதமர் மோடி எழுதி வெளியிட்டார்.

அடுத்து மறுதேர்வு உள்ளிட்ட பல காரணங்களால் மிகுந்த மன அழுத்தத்தில் சிக்கியிருக்கும் மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் உதவும் வகையில் "Exam Warriors 2"  என்ற புத்தகத்தை பிரதமர் மோடி எழுதுவாரா? என்று நக்கலாக கேள்வி எழுப்பியுள்ளார்.

 

 

Trending News