ஜல்லிக்கட்டு போராட்டம்: நடிகர் விஜய்சேதுபதி பங்கேற்பு

Last Updated : Jan 19, 2017, 12:43 PM IST
ஜல்லிக்கட்டு போராட்டம்: நடிகர் விஜய்சேதுபதி பங்கேற்பு title=

திண்டுக்கல்லில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடைபெற்று வரும் போராட்டத்தில் நடிகர் விஜய்சேதுபதி  பங்கேற்றுள்ளார். கல்லறை தோட்டத்தில் நடைபெற்று வரும் போராட்டத்தில் நடிகர் விஜய்சேதுபதி பங்கேற்றுள்ளார். 

ஜல்லிக்கட்டு தடையை நீக்கும் வரை போராட்டம் ஓயக் கூடாது என்று மாணவர்களை சந்தித்து நடிகர் விஜய்சேதுபதி ஆதரவு தெரிவித்தார்.

ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி மாணவர்கள், இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். 

அப்போது ஆர்ப்பாட்டம் நடந்த இடத்துக்கு நடிகர் விஜய்சேதுபதி வந்தார். அவர் போராட்டம் நடத்தும் மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்து பேசினார். 

அப்போது அவர் :-

தமிழகத்தில் பாரம்பரிய விளையாட்டாக சங்க காலத்திலேயே அடையாளம் காட்டப்பட்டது ஜல்லிக்கட்டு. இந்த வீர விளையாட்டுக்கு தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை தமிழ் இனத்துக்கே செய்யும் துரோகம் ஆகும். தற்போது மாணவர்கள் ஒருங்கிணைந்து பாரம்பரியத்தை காக்க போராடுவது பாராட்டுக்குரியது.

உங்களது போராட்டத்துக்கு நான் எப்போதும் துணை நிற்பேன். இவ்வாறு அவர் பேசினார்.

Trending News