பாக்கியத்துக்கு விழுந்த அறை.. கலங்கிய சூடாமணி “அண்ணா சீரியல்” இன்றைய எபிசோட் அப்டேட்

Anna TV Serial Today Episode: இன்றைய “அண்ணா சீரியல்” சீரியல் எபிசோட்டில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

Written by - Shiva Murugesan | Last Updated : Jul 30, 2024, 04:05 PM IST
பாக்கியத்துக்கு விழுந்த அறை.. கலங்கிய சூடாமணி “அண்ணா சீரியல்” இன்றைய எபிசோட் அப்டேட் title=

Tamil TV Serial: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினம் தோறும் இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் பாக்கியம் இசக்கிக்காக எடுத்து வந்த நகையை முத்துப்பாண்டியிடம் கொடுத்து அதை இசக்கியிடம் கொடுக்க வைத்த நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

அதாவது முத்துப்பாண்டி நகையை கொடுத்ததும் அதை பார்த்து இசக்கி சந்தோஷப்படுகிறாள். அடுத்ததாக ரத்னா தூங்கி எழுந்து காய்கறிகளை வெட்டிக் கொண்டு இருக்க அங்கு வந்த சூடாமணி நீ ஏமா இதெல்லாம் செய்யுற என்று கேட்க பரணி இன்னும் எழுந்துக்கல போல எங்களுக்காக அவ நிறைய செய்யுறா.. நல்லா தூங்கட்டும் என்று சொல்கிறாள்.

அதன் பிறகு சூடாமணி நான் தான் அவங்க ரெண்டு பேரையும் திருநள்ளாறு அனுப்பி வச்சிருக்கேன் என்று சொன்னதும் ரத்னா ஏன் என்று கேட்கிறாள். இங்க வீட்ல யாருக்குமே கிரகம் சரியில்ல.. உங்களுடைய ஆசைகளையே அவனுடைய ஆசையா வாழுற சண்முகம் அவனுடைய வாழ்க்கையை பற்றி யோசிக்கல.. பரணியும் இந்த வீட்டுக்கு வாழ வந்தது உங்களுக்கு ஒரு அம்மாவாகவே மாறிட்டா.. அவங்க வாழ்க்கையில சந்தோஷமா இருக்கணும் அதனால தான் அனுப்பி வைத்தேன் என்று சொல்ல ரத்னா நல்ல விஷயம் செய்தீங்க நீங்க எப்பவும் எங்களோடவே இருங்க என்று சொல்ல சூடாமணி கண்கலங்கி சம்மதம் சொல்கிறாள்.

அடுத்ததாக சௌந்தரபாண்டி பாக்கியத்திடம் காபி கேட்க பாக்கியம் கொண்டு வந்து கொடுக்க தாமதம் செய்ய கடுப்பான சௌந்தரபாண்டி அவளை பிடித்து அடித்து விடுகிறார். பாக்கியம் இனிமே என் மேல கைய வச்சீங்க அவ்வளவுதான் என்று பதிலடி கொடுக்கிறாள்.

அதன் பிறகு காய்கறிகளை வாங்கிக் கொண்டு இசக்கி வீட்டுக்கு வர சௌந்தரபாண்டி இது எல்லாம் எதுக்கு நீ வாங்கிட்டு வர என்று கேள்வி கேட்கிறார். அவருக்கு ஸ்டேஷனுக்கு சாப்பாடு கொண்டு போய் கொடுத்துட்டு வந்தேன் வர வழியில வாங்கிட்டு வந்தேன் என்று சொல்ல என் பையன கைக்குள்ள போட்டுக்க பாக்குறியா என்று அவளிடமும் கோபப்படுகிறார்.

அதன் பிறகு இசக்கி உள்ளே வர பாக்கியம் தலைவிரி கோலமாக உட்கார்ந்து இருக்க என்ன ஆச்சு என்று கேட்க உங்க மாமா அடிச்சிட்டாரு என்று சொல்கிறாள். இதனால் இசக்கி சௌந்தரபாண்டியிடம் சண்டைக்கு வர அவர் ஓடுகாலி மகளே என்று கோபப்பட்டு திட்டுகிறார்.

இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

மேலும் படிக்க - நாம கல்யாணம் பண்ணிக்கலாமா.. “நெஞ்சத்தை கிள்ளாதே” இன்றைய எபிசோட் அப்டேட்

Trending News