பாகுபலி-2: இங்கிலாந்து ராணிக்கு முதல் சிறப்புக் காட்சி ?

Last Updated : Mar 1, 2017, 02:59 PM IST
பாகுபலி-2:  இங்கிலாந்து ராணிக்கு முதல் சிறப்புக் காட்சி ? title=

இங்கிலாந்து ராணி II எலிசபத்திற்கு பாகுபலி-2 படத்தின் சிறப்புக் காட்சி திரையிடப்பட உள்ளதாக தகவல்கள் வெளி வந்துள்ளது.

பிரிட்டிஷ் அரசிடம் இருந்து இந்தியா விடுதலை பெற்று 70 ஆண்டுகள் நிறைவடைய உள்ளதை, இங்கிலாந்து மற்றும் இந்திய கலாச்சார அமைச்சகங்கள் இணைந்து வரும் ஏப்ரல் 27-ம் தேதி கொண்டாட உள்ளன. இந்த நிகழ்ச்சியில் இங்கிலாந்து ராணி II எலிசபெத் மற்றும் இந்திய திரை நட்சத்திரங்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

இந்த கொண்டாட்டத்தில் பாகுபலி திரைப்படமும் அடங்கும்.

இந்நிலையில் வரும் ஏப்ரம் 28-ம் தேதி பாகுபலி-2 திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. இந்த திரைப்படம் வெளியாவதற்கு ஒரு நாள் முன்னதாக இங்கிலாந்து ராணிக்கு பிரத்யேகமாக பாகுபலி-2 திரையிடப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Trending News