அடுத்தடுத்து 3 நடிகைகள் தற்கொலை! கொல்கத்தாவில் தொடரும் மர்மங்கள்

மேற்கு வங்காளத்தின் கொல்கத்தா நகரில் அடுத்தடுத்து 3 நடிகைகள் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Written by - Geetha Sathya Narayanan | Last Updated : May 27, 2022, 05:52 PM IST
  • நடிகைகளின் குழுவில் மர்மமான அச்சுறுத்தல் ஏதோ நிலவுவதாக கொல்கத்தா போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
  • 3 நடிகைகளின் தற்கொலைக்கும் உண்மையான காரணம் என்ன?
அடுத்தடுத்து 3 நடிகைகள் தற்கொலை! கொல்கத்தாவில் தொடரும் மர்மங்கள் title=

மேற்கு வங்காளத்தின் பிரபல தொலைக்காட்சி நடிகையான பல்லவி டே கொல்கத்தாவில் உள்ள தனது குடியிருப்பில் கடந்த 15ந்தேதி தற்கொலை செய்து உயிரிழந்தார். முதற்கட்ட விசாரணையில் அவர் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார் என தெரிய வந்தது.

Pallavi dey

இந்நிலையில் 12 நாட்களுக்குள் தொடர் சம்பவங்களாக தற்போது 2 நடிகைகள் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் கொல்கத்தாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகையும் மாடலுமான பிதிஷா டி மஜும்தார் (வயது 21) மேற்கு வங்காளத்தின் கொல்கத்தா நகரில் டம்டம் என்ற இடத்தில் நாகர்பஜார் பகுதியில் உள்ள வாடகை குடியிருப்பு ஒன்றில் கடந்த 4 மாதங்களாக வசித்து வந்தார். 

இந்நிலையில் அவர் கடந்த 25ந்தேதி மாலை தனது இல்லத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அந்த சம்பவத்திற்கு பிறகு பிதிஷாவின் நெறுங்கிய தோழி மஞ்சுஷா நியோகி என்ற பெங்காலி மாடல் அழகி தற்போது தற்கொலை செய்து கொண்டுள்ளார். 

மேலும் படிக்க | உயர் இரத்த அழுத்த நோயாளிகள் இந்த ஜூஸை கண்டிப்பா குடிக்கணும்

Bidisha

இது குறித்து போலீஸார் கூறுகையில், கடந்த மூன்று நாட்களில் நடிகைகளின் தற்கொலை இரண்டாவது முறையாக நடந்துள்ளது என்று தெரிவித்தனர்.

மேலும் மஞ்சுஷா நியோகியின் தற்கொலை குறித்து அவரது தாயார் பேசுகையில், மஞ்சுஷாவும், பிதிஷாவும் நெறுங்கிய உயிர் தோழிகள் என்றும், அவர்களுடன் மேலும் 3 பெண் தோழிகள் எப்போதும் இருப்பார்கள் என்றும் தெரிவித்தார். மேலும் மஞ்சுஷா எப்போதும் பிதிஷாவுடன் இருக்கவே ஆசைப்படுவார் என்றும், தோழியின் தற்கொலைக்குப் பின் அவர் ஆழ்ந்த சோகத்திலும் மன உளைசலிலும் சிக்கி தவித்தார் என்றும் தெரிவித்தார். மன அழுத்தம் காரணமாக தனது மகள் உயிரிழந்திருக்கக்கூடும் என அவர் தெரிவித்தார்.

Manjusha

இருப்பினும், 12 நாட்களுக்கு முன்பு பல்லவி ஏன் தற்கொலை செய்து கொண்டார் எனும் மர்மமே இன்னும் கண்டுப்பிடிக்கவில்லை. இதையடுத்து 25ஆம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட பிதிஷாவின் தற்கொலையிலும் சந்தேகம் தொடர்கிறது. இந்நிலையில் அவரது நெறுங்கிய தோழியான மஞ்சுஷாவும் தற்கொலை செய்து கொண்டதால், நடிகைகளின் குழுவில் மர்மமான அச்சுறுத்தல் ஏதோ நிலவுவதாக கொல்கத்தா போலீஸார் சந்தேகிக்கின்றனர்.

மேலும் இந்த 3 நடிகைகளின் தற்கொலைக்கும் உண்மையான காரணம் என்ன என்றும், வேறு குறுக்கீடுகள் ஏதேனும் உள்ளனவா என்றும் போலீஸார் வழக்கு பதிந்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க | White Hair Problem: நரை முடி கருப்பாக மாற இதை ஃபாலோ பண்ணுங்க

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News