மீனாட்சி பொண்ணுங்க இன்றைய எபிசோட் அப்டேட்! மீனாட்சியை காப்பாற்ற போராடும் மகள்கள்

Meenakshi Ponnunga TV Serial Online:  மீனாட்சியை காப்பாற்ற போராடும் மகள்கள்.. ஷக்திக்கு தெரிய  வரும் புஷ்பாவின் சதி வேலைகள் - மீனாட்சி பொண்ணுங்க இன்றைய எபிசோட் அப்டேட்   

Written by - Malathi Tamilselvan | Last Updated : Nov 16, 2023, 11:59 AM IST
  • ஷக்திக்கு தெரிய வரும் புஷ்பாவின் சதி வேலைகள்
  • மீனாட்சி பொண்ணுங்க இன்றைய எபிசோட் அப்டேட்
  • மீனாட்சியை காப்பாற்ற போராடும் மகள்கள்
மீனாட்சி பொண்ணுங்க இன்றைய எபிசோட் அப்டேட்! மீனாட்சியை காப்பாற்ற போராடும் மகள்கள் title=

தமிழ் சீரியலுக்கு என்று பெரும் ரசிகர் பட்டாளம் இருக்கிறது. விஜய் டிவி, சன் டிவி, ஜீ தமிழ் மற்றும் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சிகளுக்கு இடையே சீரியல் டிஆர்பியில் கடும் போட்டி இருக்கிறது. ஒவ்வொரு தொலைக்காட்சிக்கும் ஒரு சில சீரியல்கள் பெரிய பிராண்டாகவும், பாப்புலராகவும் இருக்கின்றன. 

அந்தவரிசையில் ஜீ தமிழ் தொலைக்காட்சிக்கு மீனாட்சி பொண்ணுங்க சீரியல் அடையாளமாக இருக்கிறது. மிகவும் பிரபலமாக இருக்கும் இந்த சீரியலுக்கு பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கிறது. தினம் தினம் புதிய திருப்பங்களுடன் செல்லும் மீனாட்சி பொண்ணுங்க சீரியலில் அடுத்த புதிய திருப்பம் ஒன்று இன்றைய எபிசோடில் நிகழ இருக்கிறது. 

மேலும் படிக்க | ஜவான் படம் எப்போது ஓடிடியில் வெளியாகும்? வெளியானது தேதி!

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9.30 மணிக்கு ஒளிப்பரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மீனாட்சி பொண்ணுங்க. இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் மீனாட்சி பிழைப்பது கஷ்டம் என சித்த வைத்தியர் சொன்ன நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்...

அதாவது, திடியன் சித்த வைத்திய சாலைக்கு வந்து மீனாட்சியை பார்த்து அதிர்ச்சி அடைகிறான். சங்கிலி மீனாட்சிக்கு விஷம் வைத்ததையும் அடியாட்கள் அடித்து பத்திரத்தில் கையெழுத்து போட சொன்னதையும் சக்தி காப்பாற்றியதையும் திடியனிடம் சொல்கின்றனர்.

serial update

இங்கே ரங்கநாயகியின் விழாவில் ஆள் மாராட்டம் செய்து ஏமாற்றியது ரங்கநாயகிக்கு தெரிந்து விழா நின்று போனதையும் திடியன் சொல்கிறான். பிறகு மீனாட்சி கண் முழிக்க வேண்டும் என்று இரவெல்லாம் தூங்காமல் பேச்சு கொடுத்துக்கொண்டு மூன்று பெண்களும் காத்துக் கொண்டிருக்கிறார்கள். மீனாட்சிக்காக பக்தி பாடல்களை பாடுகிறார்கள். 

மறுபக்கம் புஷ்பா நீதிமணியிடம் நல்ல முறையில் பேசி சங்கலியை வைத்து நீதிமணிக்கு மதுவை ஊற்றிக்கொடுத்து அவனை போதையாக்குகிறாள். புஷ்பா ரவுடிக்கு போன் செய்து மீனாட்சி உயிருடன் இருக்கிறாளா இறந்துவிட்டாளா என்று கேட்க, சித்த வைத்திய சாலையில்  ரவுடி மீனாட்சியை கொலை செய்ய முயற்சிக்க , அங்கு வந்த சக்தி அவனை தடுத்து நிறுத்தி அந்த ரவுடியின் கையை முறுக்கிஅவன் கையில் இருக்கும் செல்போனை பிடுங்குகிறாள். 

அதில் புஷ்பா மீனாட்சி இந்நேரம் இறந்திருக்க வேண்டுமே என்று  சொன்னதையும்  நீதிமணி குடித்துவிட்டு உளறிக் கொண்டு இருக்கும் சத்தத்தையும் போனில் கேட்டு சக்தி கோவத்துடன் செல்போனை தூக்கிப்போட்டு உடைக்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய மீனாட்சி பொண்ணுங்க சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

மேலும் படிக்க | தளபதி 68 ஒரு டைம் ட்ராவல் படமா? வெளியான சுவாரஸ்ய தகவல்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News