ரங்கநாயகியின் சதிதிட்டம்.. உடைந்து போன மீனாட்சி - மீனாட்சி பொண்ணுங்க இன்றைய எபிசோட்

வெற்றியின் மனைவியாக வாழ்வதற்காக ஐஏஎஸ் கனவை சக்தி விட்டுக் கொடுத்துவிட்டதாக ரங்கநாயகி கூற மீனாட்சி அதிர்ச்சியடைகிறாள்.  

Written by - Karthikeyan Sekar | Last Updated : Oct 6, 2023, 01:28 PM IST
  • மீனாட்சி பொண்ணுங்க சீரியல் அப்டேட்
  • ரங்கநாயகி போடும் பல சதித்திட்டம்
  • தெரிந்து கொண்ட மீனாட்சிக்கு ஷாக்
ரங்கநாயகியின் சதிதிட்டம்.. உடைந்து போன மீனாட்சி - மீனாட்சி பொண்ணுங்க இன்றைய எபிசோட்

தமிழ் சீரியலுக்கு என்று பெரும் ரசிகர் பட்டாளம் இருக்கிறது. விஜய் டிவி, சன் டிவி, ஜீ தமிழ் மற்றும் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சிகளுக்கு இடையே சீரியல் டிஆர்பியில் கடும் போட்டி இருக்கிறது. ஒவ்வொரு தொலைக்காட்சிக்கும் ஒரு சில சீரியல்கள் பெரிய பிராண்டாகவும், பாப்புலராகவும் இருக்கின்றன.  அந்தவரிசையில் ஜீ தமிழ் தொலைக்காட்சிக்கு மீனாட்சி பொண்ணுங்க சீரியல் அடையாளமாக இருக்கிறது. மிகவும் பிரபலமாக இருக்கும் இந்த சீரியலுக்கு பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கிறது. தினம் தினம் புதிய திருப்பங்களுடன் செல்லும் மீனாட்சி பொண்ணுங்க சீரியலில் அடுத்த புதிய திருப்பம் ஒன்று இன்றைய எபிசோடில் நிகழ இருக்கிறது. 

Add Zee News as a Preferred Source

மேலும் படிக்க | ஐஸ்வர்யா போட்ட புதிய திட்டம் - கார்த்திகை தீபம் சீரியல் அப்டேட்!

மீனாட்சி பொண்ணுங்க சீரியலை பொறுத்தவரை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் வெற்றி சக்திக்கு மறு தாலி கட்டும் நிகழ்ச்சி நடக்கிறது. அனைவரும் சந்தோஷமாய் இருக்க அங்கே வரும் புஷ்பா மீனாட்சியை சந்திக்கிறாள். அப்போது, ரங்கநாயகி உன் மகள் கலெக்டராக கூடாது என்று சதி செய்கிறாள் என்று கூறி விட்டுப் போகிறாள் புஷ்பா. அதன்பிறகு வரும் ரங்கநாயகி, மீனாட்சியிடம் வந்து உன் மகளை என்னவோ என்று நினைத்தேன். ஆனால் வெற்றியின் மனைவியாக வாழ்வதற்காக தன் ஐஏஎஸ் கனவை விட்டுக் கொடுத்து விட்டாள் என்று கூற, மீனாட்சி மனம் உடைந்து போகிறாள். 

இதையடுத்து மீனாட்சி கல் கோயிலில் சென்று சாமி கும்பிட்டுவிட்டு வருத்தத்துடன் இருக்கிறாள். அங்கே வரும் நீதிமணியிடம் உன் மகள்களுக்கு அப்பாவாக நீ என்ன செய்தாய் என்று ஆவேசத்துடன் மீனாட்சி திட்டி விடுகிறாள். சக்தி கலெக்டராக கூடாது என்று ரங்கநாயகி திட்டம் போடுகிறாள், நம் மகளின் வாழ்க்கையை யார் யாரோ தீர்மானிக்கிறார்கள் என்று கூற நீதிமணி அதிர்ச்சியாகி யோசிக்கிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய மீனாட்சி பொண்ணுங்க சீரியலை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

மேலும் படிக்க | மீனாட்சி பொண்ணுங்க: மீனாட்சி வீட்டுக்கு வந்து சர்ப்ரைஸ் கொடுத்த ரங்கநாயகி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

About the Author

Karthikeyan Sekar

I am Karthikeyan, a Senior Sub-Editor at Zee Tamil News Channel, bringing 10 years of experience in the media industry. I have extensive experience working in both news television and online website platforms.

...Read More

Trending News