தெலுங்கு சினிமாவுக்கு இயக்குநர் சங்கர் சென்றது ஏன்? பின்னணி தகவல்

தமிழ் சினிமாவை தவிர்த்து தெலுங்கு சினிமாவுக்கு நடிகர் சங்கர் சென்று ஏன்? என்ற தகவல் வெளியாகியுள்ளது. 

Written by - S.Karthikeyan | Last Updated : May 18, 2022, 03:12 PM IST
  • தெலுங்கு சினிமாவுக்கு சென்ற சங்கர்
  • இதுதான் காரணம் என தகவல்
  • ஆர்சி 15 அப்டேட்டை எதிர்பார்க்கும் ரசிகர்கள்
தெலுங்கு சினிமாவுக்கு இயக்குநர் சங்கர் சென்றது ஏன்? பின்னணி தகவல் title=

இயக்குனர் ஷங்கர் தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க இயக்குனர்களில் ஒருவர். தமிழ் சினிமாவில் இதுவரை கண்டிராத ‘பிரமாண்டம்’ என்ற வார்த்தையை கொண்டு வந்தவர். தனது முதல் படமான ஜென்டில்மேன் மூலம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். இது அந்த நேரத்தில் இந்தியாவில் அதிக வசூல் செய்த தமிழ் படமாக மாறியது. இப்படம் விமர்சன ரீதியாகவும், பாராட்டப்பட்டது. அன்று முதல் தமிழில் பிரம்மாண்ட படங்களைக் கொடுத்துக் கொண்டிருந்த சங்கர், கடைசியாக கமல்ஹசானை வைத்து இந்தியன் 2 படத்தை இயக்கினார்.

மேலும் படிக்க | ‘சூப்பர் ஒயிட்’! - இணையத்தில் வைரலாகும் அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்!

விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்த படப்பிடிப்பின்போது, எதிர்பாராதவிதமாக விபத்து ஏற்பட்டது. இதில் தொழில்நுட்ப கலைஞர்கள் உயிரிழந்ததால் பொதுவெளியில் பெரும் சர்ச்சையாக வெடித்தது. இதற்கு சங்கரும், நடிகர் கமல்ஹாசனும் தயாரிப்பு நிறுவனமான லைகா மீது குற்றச்சாட்டுகளை அடுக்கினார். அறிக்கைகளையும் வெளியிட்டனர். இதனால் கடுப்பான லைகா, இயக்குநர் சங்கருடன் தொடர்ந்து ஒத்துழைப்பு கொடுக்க மறுத்தது. அதாவது, சங்கர் எதிர்பார்த்த பட்ஜெட்டை ஒதுக்க மறுத்தது. இந்த விவகாரம் பூதாகரமானதால் நிறுத்தப்பட்ட படப்பிடிப்பு தொடங்கப்படவே இல்லை.

லைகா நிறுவனமும் நீதிமன்றத்தில் சங்கர் மீது வழக்கு தொடர்ந்தது. இதனால், தமிழில் படப்பிடிப்புகளை தொடங்காமல் இருந்த சங்கர், தெலுங்கு பட உலகுக்கு சென்றார். அங்கு ராம்சரணை வைத்து பெயரிடப்படாத ஆர்சி 15 என்ற திரைப்படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். இப்படத்தின் சூட்டிங்கும் அண்மையில் நிறைவடைந்தது. ஆர்ஆர்ஆர் படத்தின் புரமோஷன் பணிகளில் பிஸியாக இருந்த ராம்சரண், அந்தப் பணிகளை முடித்தவுடன் சங்கர் படப்பிடிப்பிலும் கலந்து கொண்டார். விரைவில் படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் நிறைவடைந்து, அடுத்தடுத்த அறிவிப்புகள் வெளியாக இருக்கிறது. தமிழில் மாயாஜாலத்தை நிகழ்த்தியதுபோல், தெலுங்கு பட உலகிலும் இயக்குநர் சங்கர் நிகழ்த்துவாரா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 

மேலும் படிக்க | மகள்களுக்காக காத்திருக்கிறேன் - மறுமணம் குறித்து இமான் நெகிழ்ச்சி பதிவு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News