குரோதி மகாளய பித்ரு பக்ஷத்தில் ஏற்படும் 2 கிரகணங்களினால் சிக்கி சீரழியப் போகும் பாவப்பட்ட ராசிகள்!

2 Grahans Within 15 Days : பித்ரு பக்ஷம் இன்னும் சில மணி நேரங்களில் தொடங்கப் போகிறது, பித்ரு பக்ஷத்தின் 15 நாட்களில் நிகழும் 2 கிரகணங்களும் சூரிய சஞ்சாரமும் புதன் சஞ்சாரமும் சில ராசிகளுக்கு மிகவும் மோசமானதாக இருக்கும்...

நாளை, செப்டம்பர் 17 தொடங்கும் பித்ரு பக்ஷம் அக்டோபர் 2 வரை தொடரும். இந்த காலகட்டத்தில், சந்திர கிரகணம் 18 செப்டம்பர் அன்றும், சூரிய கிரகணம் 2 அக்டோபர் அன்றும் நிகழும்...

1 /8

மகாளய பட்சம் எனப்படும் 15 நாட்களில் 2 கிரகணங்களும் 2 கிரகப் பெயர்ச்சிகளும் நடைபெறவிருப்பதால் பல ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பிரச்சனைகள் அதிகரிக்கும்

2 /8

சூரிய கிரகணம் 2 அக்டோபர் 2024 அன்று நிகழும்.

3 /8

சந்திர கிரகணம் 18 செப்டம்பர் 2024 அன்று நிகழும்    

4 /8

இரு கிரகணங்களைத் தவிர, சூரியனும் புதனும் மூன்று ராசிகளை பாதிக்கின்றனர். சூரியனும் புதனும் கன்னி ராசியில் இருக்கும் போது, இரு கிரகங்களின் இணைவும் சேர்த்து மூன்று ராசிகளை பாதிக்கும். 

5 /8

கடக ராசிக்காரர்களுக்கு இந்த 15 நாட்களில் பண இழப்பு ஏற்படலாம். கடன்சுமை அதிகரிக்கலாம். தொழில்-வியாபாரத்தில் வரும் பிரச்சனைகள் மனதில் கவலைகளை அதிகரிக்கும் வீட்டில் சண்டை சச்சரவு ஏற்படலாம்.

6 /8

திருமண வாழ்க்கையில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என்பதால் துலாம் ராசிக்காரர்கள் கவனமாக வார்த்தைகளை கையாள்வது நல்லது குழந்தைகளால் பிரச்சனைகள் வரலாம்., தொழில், வியாபாரத்தில் தடைகளை சந்திக்க நேரிடலாம், எனவே வாயைக் கட்டுப்படுத்துவது புரட்டாசி மாதத்தில் நல்லது

7 /8

மகர ராசிக்காரர்களுக்கு சில பிரச்சனைகள் பெரியதாக மாறும். மூதாதையர் சொத்து சம்பந்தமான தகராறு  மன உலைச்சலைக் கொடுக்கும். செலவுகள் அதிகரிக்கு காலம் இது. ஆனால் கடன் வாங்குவதைத் தவிர்ப்பது நல்லது. பணம் பதற்றத்தை ஏற்படுத்தும் காரணியாக மாறும்  

8 /8

பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் உள்ளன. ZEE NEWS இதை உறுதிப்படுத்தவில்லை