30 ஆண்டுக்குப் பிறகு உருவாகும் அசுப யோகம், சனியால் இந்த ராசிகளுக்கு இனி கஷ்ட காலம்

Shadashtak Yoga: இன்று முதல் மிகவும் மோசமான ஷடாஷ்டக யோகம் உருவாகவுள்ளது. இந்த யோகமானது செவ்வாய் மற்றும் சனியால் உருவாகவுள்ளது. சனி செவ்வாயால் உருவாகும் ஷடாஷ்டக யோகத்தால் சில ராசிக்காரர்களுக்கு மோசமான மற்றும் பல பிரச்சனைகளை தரக்கூடும்.

செவ்வாய் இன்று பலவீனமான ராசியான கடக ராசிக்குள் நுழைகிறார். இப்படி செவ்வாய் கடக ராசிக்குள் நுழையும் போது, சனி-செவ்வாயால் 6-க்கு 8 என்னும் ஷடாஷ்டக யோகம் உருவாகிறது. செவ்வாய் இந்த கடக ராசியில் ஜூலை 01 ஆம் தேதி வரை இருப்பார். இதனால் இந்த ஷடாஷ்டக யோகத்தின் தாக்கம் ஜூலை மாதம் வரை இருக்கும். எந்த ராசிக்காரர்கள் ஷடாஷ்டக யோகத்தால் கவனமாக இருக்க வேண்டும் என்பதைக் காண்போம்.

1 /5

சனி - செவ்வாய் ஷடாஷ்டக யோகம்: இந்த யோகம் 2 மாதங்களுக்கு 4 ராசிக்காரர்களுக்கு நெருக்கடியான காலகட்டத்தை தரும். இந்த மக்கள் துக்கம், நோய், கடன், கவலை, துரதிர்ஷ்டம் மற்றும் துன்பங்களை சந்திக்க வேண்டியிருக்கும்.  

2 /5

கடக ராசி: கடக ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும். சொத்து விஷயத்தில் சச்சரவுகள் காணப்படும். பணத்தை முதலீடு செய்வதில் கவனமாக இருக்க வேண்டும். உங்கள் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளுங்கள்.  

3 /5

சிம்ம ராசி: சிம்ம ராசிக்காரர்களின் வாழ்க்கையில் டென்ஷன் மற்றும் பிரச்சனைகள் அதிகரிக்கும். பணியிடத்தில் கவனமாக இருப்பது அவசியம். செலவுகள் அதிகரிக்கும்.  

4 /5

தனுசு ராசி: தனுசு ராசிக்காரர்களுக்கு செலவுகள் அதிகரிக்கும். மன உளைச்சலில் இருக்க நேரிடும். மனைவியுடன் சில கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம்.  

5 /5

கும்ப ராசி: கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த யோகம் பிரச்சனைகளை உண்டாக்கும். மன உளைச்சலை சந்திக்க நேரிடும். திருமண வாழ்க்கையில் தவறான புரிதல் ஏற்படலாம். வாகனத்தால் விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது.