சுகர் லெவலை சூப்பரா குறைக்கும் மூலிகைகள்: இப்படி சாப்பிட்டு பாருங்க

Diabetes Control Tips: இன்றைய அவசர வாழ்க்கை முறையில் மக்களை வாட்டி வதைக்கும் நோய்களில் நீரிழிவு நோய் முக்கிய இடத்தில் உள்ளது. இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவும் சில இயற்கையான வழிகளை இங்கே காணலாம்.  

Diabetes Control Tips: ஒருவருக்கு இரத்த சர்க்கரை அளவு அதிகமானால், அதனால் பக்கவாதம், இதய நோய், சிறுநீரக நோய், பார்வை கோளாறு, நரம்பு பாதிப்பு போன்ற பல வித பிரச்சினைகள் ஏற்படுகின்றன. நீரிழிவு நோய் உலக அளவில் மிகப்பெரிய ஆபத்தாக உருவெடுத்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மிக வேகமாக அதிகரித்து வருகின்றது. உலக சுகாதார அமைப்பு (WHO)  2030 ஆம் ஆண்டில் டைப் 2 நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை இரட்டிப்பாகும் என எச்சரித்துள்ளது.

1 /9

நீரிழிவு நோய் உலகம் முழுதும் வேகமாக பரவி வருகின்றது. இதில் உடலில் இரத்த சர்க்கரை அளவு திடீரென அதிகரிக்கின்றது. நீரிழிவு நோயை முழுமையாக குணப்படுத்த முடியாது என்றாலும், ஆரோக்கியமான வாழ்க்கை முறை மற்றும் உணவு முறை மூலமாக இதை எளிதாக கட்டுப்படுத்தலாம். நாம் தினசரி பயன்படுத்தும் சில மூலிகைகளும் மசாலாக்களும் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகின்றன.   

2 /9

நீரிழிவு நோயாளிகள் தங்கள் உணவில் அதிகப்படியான கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும். தவறான உணவுகளை உட்கொண்டால் சிலருக்கு உடனடியாக இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கலாம். இதனால் உடல்நிலை மோசமாகலாம்.  நீரிழிவு நோயை சில ஆயுர்வேத மூலிகைகளின் உதவியுடன் கட்டுப்படுத்தலாம். நீரிழிவு நோயாளிகளின் இரத்த சர்க்கரை அளவை குறைக்க உதவும் சில மூலிகை வகைகளை இங்கே காணலாம்.  

3 /9

சமையலில் நாம் பெரும்பாலும் இலவங்கப்பட்டையை அதிகமாக பயன்படுத்துகிறோம். இது சுவை, மணத்தை அளிப்பதோடு இரத்தத்தில் சர்க்கரை அளவைக் குறைப்பதற்கும், டைப் 2 நீரிழிவு நோயை எதிர்த்துப் போராடுவதற்கும் உதவுகின்றது. நீரிழிவு நோயாளிகள் தினமும் காலையில் இலவங்கப்பட்டை தேநீர் குடிக்கலாம். இரத்த சர்க்கரை அளவை குறைப்பதோடு, இலவங்கப்பட்டை உடலின் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கின்றது. 

4 /9

ஓமத்தில் நீரிழிவு எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இவை சுகர் லெவலை குறைக்க உதவும். இதுமட்டுமின்றி ஓம நீர் செரிமானத்தை மேம்படுத்தவும், வாயுத்தொல்லை, உப்பசம், உடல் வீக்கம் ஆகியவற்றில் நிவாரணம் அளிக்கவும் உதவும்.

5 /9

தனியா, அதாவது மல்லி விதைகள் டைப் 2 நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் சிறந்த மருந்தாக கருதப்படுகின்றன. இது கணைய செல்களில் இருந்து அதிக இன்சுலின் உற்பத்தியைத் தூண்டுகிறது. மல்லி விதைகள் உடலில் இரத்த சர்க்கரையை குறைக்கும் என்சைம்களின் செயல்பாட்டை அதிகரிக்கும். இது இரத்த சர்க்கரையின் அளவைக் குறைக்க உதவுகிறது. தனியா நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கின்றது. 

6 /9

கிராம்பு பல வித அரோக்கிய நன்மைகள் நிறைந்த ஒரு மசாலா ஆகும். இதில் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கும் பண்புகள் அதிகமாக உள்ளன. கிராம்பு இன்சுலின் சென்சிடிவிடியையும் மேம்படுத்துகிறது. சுகர் நோயாளிகள் டீயில் கிராம்பு சேர்த்து குடிப்பது நன்மை பயக்கும். 

7 /9

துளசி பல வித ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது. இது இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைப்பதோடு, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து உடலை தொற்றுகள் மற்றும் நோய்களிலிருந்து காக்கிறது. 

8 /9

வெந்தய விதைகளில் அமினோ அமிலம் (4-ஹைட்ராக்ஸிசோசயனேட்) உள்ளது, இது உடலின் கணைய செல்களில் குளுக்கோஸ்-தூண்டப்பட்ட இன்சுலின் உற்பத்தியை அதிகரிக்கிறது. வெந்தயத்தில் 50 சதவீதம் நார்ச்சத்து உள்ளது, இது ஹைப்போலிபிடெமிக் விளைவுக்கு மற்றொரு காரணமாக உள்ளது. வெந்தயம் உடலில் இரத்த சர்க்கரை அளவை குறைப்பதோடு உடல் எடையையும் குறைக்க உதவுகின்றது.

9 /9

பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.