Budget 2022: நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுடைய பட்ஜெட் குழுவின் முக்கிய நபர்கள்

Union Budget 2022: 1 பிப்ரவரி 2022 அன்று நாட்டின் நிதியமைச்சர் அடுத்த நிதியாண்டுக்கான பட்ஜெட் 2022-ஐ தாக்கல் செய்வார். இந்த பட்ஜெட் குறித்து பல எதிர்பார்ப்புகள் உள்ளன. முழுமையான பட்ஜெட் தயாரிப்பில் நீண்ட செயல்முறை உள்ளது. இதற்காக ஒரு குழு (பட்ஜெட் 2022 குழு) பல மாதங்ளாக பல பணிகளை மேற்கொள்கிறது.

நிதியமைச்சர் பட்ஜெட் தயாரிக்கும் பொறுப்பை தனது முக்கிய குழுவிடம் ஒப்படைக்கிறார். இதில், நிதி அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இந்த ஆண்டு பட்ஜெட் தயாரிக்கும் குழுவில் யார் ஈடுபட்டுள்ளனர் என்பதை இந்த பதிவில் காணலாம்.

1 /5

1987 பேட்ச் ஐஏஎஸ் அதிகாரியான டி.வி.சோமநாதன், நிதி விவகாரங்களில் பரந்த அனுபவம் கொண்டவர். சோமநாதன் உலக வங்கியில் பணியாற்றியவர். 2015ல், பிஎம்ஓவில் இணைச் செயலர் நியமிக்கப்பட்டார். இதற்குப் பிறகு அவர் நிதிச் செயலாளராக நிதி அமைச்சகத்திற்கு அனுப்பப்பட்டார். இப்போது பட்ஜெட்டில் பொருளாதாரத்தின் வளர்ச்சி குறித்து அவருக்கு மிகப்பெரிய பொறுப்பு உள்ளது. கடினமான காலங்களில் சமச்சீர் அமைப்பை உருவாக்குவதில் சோமநாதன் நிபுணர் என்று நம்பப்படுகிறது. 

2 /5

அஜய் சேத் 1987 பேட்ச் கர்நாடக கேடரின் ஐஏஎஸ் அதிகாரி ஆவார். 2021 ஆம் ஆண்டில், அஜய் சேத் பொருளாதார விவகாரங்கள் துறையின் செயலாளராக நியமிக்கப்பட்டார். கர்நாடகாவில் பட்ஜெட் மற்றும் வணிக வரியில் சேத்துக்கு நல்ல அனுபவம் உள்ளது. வரி வசூலை அதிகரிப்பது பொருளாதாரத்தில் மிகவும் முக்கியமானது. எனவே அவரது அனுபவம் பட்ஜெட் செயல்முறையில் மிகவும் முக்கியமானது. நிதி ஒருங்கிணைப்பைத் தவிர, சேத்திற்கு பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவது சவாலாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

3 /5

தேபாஷிஷ் பாண்டா, 1987 பேட்ச் உ.பி., கேடரின் ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆவார் . நிதித்துறையில் அவரது பங்களிப்பு சிறப்பாக உள்ளது. அரசாங்கத்தில் பேட் பேங்க் செய்ததில் அவருக்குப் பெரும் பங்கு உண்டு. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், கடந்த ஆண்டு பட்ஜெட்டில் இதைப் பற்றி அறிவித்தார். 2022 ஆம் ஆண்டு பட்ஜெட்டில், சீர்திருத்தங்கள் தொடர்பான விஷயங்களில் அவருக்கு அதிக பொறுப்பு இருக்கும்.

4 /5

தருண் பஜாஜ், ஹரியானா கேடரின் 1988 பேட்ச் ஐஏஎஸ் அதிகாரி ஆவார். இவர் நிதியமைச்சகத்தின் வருவாய்த்துறை செயலாளராக உள்ளார். அதில் ஒரு அங்கமாக மாறுவதற்கு முன்பு, அவர் PMO வில் தனது சேவையை வழங்கியுள்ளார். ஆத்மநிர்பர் பாரத் யோஜனா மற்றும் அதன் தொகுப்பில் இவருக்கு பெரும் பங்கு இருந்தது. கடந்த ஆண்டுதான் அவர் வருவாய்த்துறைக்கு மாற்றப்பட்டார். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு வரி விவகாரங்களில் நிவாரணம் அளிக்கும் பொறுப்பு இவருக்கு உள்ளது. பட்ஜெட்டில் அவரது பங்கு மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

5 /5

துஹின் காந்த் பாண்டே ஒரிசா கேடரின் 1987 பேட்ச் ஐஏஎஸ் அதிகாரி ஆவார். தற்போது, ​​DIPAM செயலாளராக உள்ளார். இவர் அரசாங்கத்தில் இருந்தபோது, ​​ஏர் இந்தியாவை தனியார்மயமாக்குவதில் மிகப்பெரிய பங்கு வகித்தார். அரசாங்கத்தின் முதலீட்டு இலக்கை அடைவதில் அவரது பங்கு மிக முக்கியமானதாக இருக்கும். இம்முறையும் பங்கு விலக்கல் தொடர்பாக பல அறிவிப்புகள் வரக்கூடும். குறிப்பாக நாட்டின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனமான லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (எல்ஐசி ஐபிஓ) குறித்து, அனைவரின் பார்வையும் அவர் மீது பதிந்துள்ளது. பணமதிப்பு நீக்க வழக்கில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குழுவில் பாண்டே முக்கியமானவர் என நம்பப்படுகிறது.