சென்னை மட்டும் இல்லை! இனி கோவையிலும் ஐபிஎல் போட்டிகள் நடக்கும்!

கோயம்புத்தூரில் இந்தியாவின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியத்தை கட்ட தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்து வருகிறது. விரைவில் இதற்கான பணிகள் தொடங்க உள்ளது.

 

1 /6

தமிழக அரசு கோவையில் புதிய சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்க திட்டமிட்டுள்ளது. இந்த மைதானம் இந்தியாவிலேயே மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.  

2 /6

கடந்த ஏப்ரல் மாதம் இந்த புதிய கிரிக்கெட் மைதானம் தொடர்பான அறிவிப்பை முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டார். சமீபத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், கோவை சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்திற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பிற்கான டெண்டர்களை அழைத்துள்ளது.   

3 /6

கோவையில் இருந்து 16 கிலோமீட்டர் தொலைவில் சேலம், கொச்சி பகுதிகளை இணைக்கும் பகுதியில் மைதானம் அமைய உள்ளது. இதற்காக அந்த பகுதியில் உள்ள அரசு நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு வருகிறது.  

4 /6

தற்போது இந்தியாவில் உள்ள மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமாக நரேந்திர மோடி ஸ்டேடியம் உள்ளது. ஒரே நேரத்தில் 1,32,000 அமர்ந்து பார்க்கும் இது உலக அளவிலும் பெரிய மைத்தனமாக உள்ளது.  

5 /6

கோவையில் அமைய உள்ள மைதானம், நரேந்திர மோடி ஸ்டேடியத்தை விட பெரிய அளவில் இருக்கும் என்றும், பல அதிநவீன வசதிகளை கொண்டு இருக்கும் என்றும் கூறப்படுகிறது.   

6 /6

சமீபத்தில் தெலுங்கானா அரசு ஹைதராபாத் பகுதியில் புதிய மைதானத்தை கட்டுள்ளதாக அறிவித்துள்ளது. மேலும் மும்பை அரசும் நகருக்கு வெளியில் புதிய மைதானத்தை கட்ட உள்ளது.