இந்த 5 அறிகுறிகள் இருக்கா? உடனே சர்க்கரை அளவை செக் செய்யுங்க

Diabetes Symptoms: இன்றைய பரபரப்பான வாழ்க்கையிலும், பிஸியான வாழ்க்கை முறையிலும் நீரிழிவு நோய் இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் பெரும் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. நீரிழிவு நோய் என்பது வாழ்நாள் முழுவதும் நீடித்து வரும் நோய் என்று சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர். இது வகை 1 மற்றும் வகை 2 என இரண்டு வகைகளைக் கொண்டுள்ளது. இந்த நோயை சரியாகக் கையாளவில்லை என்றால், அது வேறு பல உடல் உபாதைகளை உண்டாக்கும். நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த, அதன் அறிகுறிகளை அறிந்து கொள்வது அவசியம்.

1 /5

நீரிழிவு நோயாளிகள் மீண்டும் மீண்டும் பசி எடுப்பது போன்ற உணர்வை பெறுகிறார்கள். ஒருவருக்கு அடிக்கடி பசி எடுத்தால், தாமதிக்காமல், அவர் உடனடியாக உடல்நலப் பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும்.

2 /5

ஒருவரது தொண்டை மீண்டும் மீண்டும் மிகவும் வறண்டு போனால், தண்ணீர் குடித்தாலும், தாகம் தணியாமல் இருந்தால், அவர் கண்டிப்பாக தனது உடல் சர்க்கரை அளவை பரிசோதிக்க வேண்டும். தணியாத தாகம் நீரிழிவு நோய்க்கான ஒரு மிகப்பெரிய அறிகுறியாகும்.

3 /5

இரவு நேரங்களில், நான்கு அல்லது ஐந்து முறை சிறுநீர் கழிக்க எழ வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால், உடல் சர்க்கரை அளவை பரிசோதித்துக்கொள்ள வேண்டும், ஏனெனில் இது நீரிழிவு நோயின் பெரிய அறிகுறியாகும்.  

4 /5

ஒருவருக்கு திடீரென உடல் எடை வேகமாகக் குறைய ஆரம்பித்தால், அது நீரிழிவு நோயின் அறிகுறியாக இருக்கலாம். ஆகையால், அடிக்கடி உடலில் ஏற்படும் எடை மாற்றங்களை கவனம் கொண்டு, திடீர் எடை இழப்பு இருந்தால், எச்சரிக்கையாக உடல் சர்க்கரை அளவை சரிபார்ப்பது நல்லது. 

5 /5

10 முதல் 12 மணி நேரம் வரை களைப்படையாமல் உழைத்த ஒருவர், 8 மணி நேரம் வேலையிலேயே சோர்வடையத் தொடங்கினால், சர்க்கரை நோய் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். இதுவும் நீரிழிவு நோயின் ஒரு அறிகுறியாக இருக்கலாம்.