PM Kisan Samman Nidhi எட்டாவது தவணையை பெறுவதற்கான பட்டியலில் பெயரை சரிபார்ப்பது எப்படி?

பிரதமரின் விவசாயிகளுக்கான நிதித் திட்டமான minimum income support திட்டத்தின் படி, அனைத்து சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கும் ஆண்டுதோறும் 6,000 ரூபாய் வரை குறைந்தபட்ச வருமான ஆதரவாக கொடுக்கப்படும்.

பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா அல்லது பிரதமர் கிசான் சம்மன் என்பது பதிவு செய்யப்பட்ட விவசாய பயனாளிகளுக்கு தலா 2,000 ரூபாய் என மூன்று தவணைகளில் ஆண்டுக்கு 6,000 ரூபாய் மானியம் வழங்கும் அரசு திட்டமாகும். இந்த திட்டத்தின் படி, அனைத்து சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கும் ஆண்டுக்கு ரூ .6,000 வரை குறைந்தபட்ச வருமான ஆதரவாக கிடைக்கும். 2 ஹெக்டேர் வரை நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு இந்த வருடாந்திர நிதி உதவி கிடைக்கும். 2018 டிசம்பரில் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து, இதுவரை மத்திய அரசு ஏழு தவணைகளை வழங்கியுள்ளது. எட்டாவது தவணையை பெறும் பயனாளிகளின் பட்டியலில் பெயர் இடம் பெற்றிருப்பதா என்பதை பார்க்கும் வழிகள்…

Also Read | இந்த விஷயத்தை செய்தால் உங்கள் கணக்கு முடக்கம் Twitter அதிரடி! 

1 /7

மத்திய அரசின் 75,000 கோடி ரூபாய் திட்டமானது, நாட்டில் நில உரிமையாளர்களின் அளவைப் பொருட்படுத்தாமல் 125 மில்லியன் விவசாயிகளை உள்ளடக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி பிரதமர் கிசான் யோஜனாவை 2018 டிசம்பர் முதல் தேதியன்று தொடங்கினார்.

2 /7

Step 1:  பிரதமர் கிசான் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்குச் செல்லுங்கள்: pmkisan.gov.in

3 /7

Step 2: வலைத்தளத்தின் மேல் வலதுபுறத்தில் உள்ள 'Farmers Corner' பிரிவில் உள்ள 'Beneficiary Status' விருப்பத்தை தெரிவு செய்யவும்.

4 /7

Step 3: அங்கு சென்றதும், ஆதார் எண், வங்கி கணக்கு எண் அல்லது மொபைல் எண்ணைத் தேர்ந்தெடுக்கவும். இந்த மூன்று எண்களின் உதவியுடன், நீங்கள் PK Kisan திட்டத்தின் உதவித் தொகையைப் பெற்றுள்ளீர்களா இல்லையா என்பதையும் சரிபார்க்கலாம்.

5 /7

பின்னர் இந்த வழிமுறைகளை பின்பற்றவும் Step 4: இந்த மூன்று எண்களிலிருந்து நீங்கள் தேர்ந்தெடுத்த விருப்பத்தின் விவரங்களை நிரப்பவும்.

6 /7

Step 5: இந்த எண்ணைக் கிளிக் செய்தால் எல்லா பரிமாற்றங்களின் தகவல்களும் கிடைக்கும்.

7 /7

Step 6: பிரதமர் கிசான் திட்டத்தின் 8 வது தவணை தொடர்பான தகவல்களையும் இங்கே தெரிந்துக் கொள்ளலாம்.