சாதம் சீக்கிரம் தண்ணீர் விட்டுவிடுகிறதா? இந்த ட்ரிக் மூலம் நீண்ட நேரம் நன்றாக இருக்கும்!

அலுமினிய பாத்திரத்தில் அரிசி வைத்தால் தான், கெட்டு போகிறது என்று குக்கரில் பலர் வைக்கின்றனர். இருப்பினும் குக்கரில் வைக்கும் சாதமும் இரவு நேரத்தில் சரியில்லாமல் போகிறது.

 

1 /6

இந்த காலக்கட்டத்தில் பலரும் சந்திக்கும் பிரச்சனை காலையில் வைக்கும் சாதம், மதியம் தண்ணீர் விட்டு விடுகிறது. வெயில் அதிகம் இருக்கும் போது இது மிகவும் நிகழ்கிறது.   

2 /6

சிலர் காலையில் வைக்கும் அரிசியை தான் மூன்று வேளை சாப்பிடுவார்கள். நீங்கள் சமைக்கும் அரிசியில் தண்ணீர் அதிகம் இருந்தால், சாப்பிட கடினமாக இருக்கும். எனவே இங்கே கொடுக்கப்பட்டுள்ள ட்ரிக்ஸ் பயன்படுத்தினால், இரவு 10 மணிக்கு கூட சாப்பிட நன்றாக இருக்கும்.  

3 /6

நீங்கள் அரிசியை சமைக்கும்போது, ​​​​ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்தால் அது அரிசியை கெட்டுப்போகாமல் வைத்திருக்க உதவுகிறது. ஒரு கப் அரிசிக்கும் ஒரு ஸ்பூன் எண்ணெய் போதும்.  

4 /6

நீங்கள் அரிசியை சமைக்கும் போது, ​​பாத்திரத்தில் அல்லது ரைஸ் குக்கரில் என எதில் வைத்தாலும், அதில் ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்தால் புதியதாகவும் சுவையாகவும் இருக்கும்.  

5 /6

அரிசியைக் வடித்த பிறகு, சுத்தமான வெள்ளைத் துணியில் அரிசியைப் போட்டு 30 நிமிடம் ஆற விடவும். பின்னர், அரிசியை ஒரு மூடி வைத்தால், நீண்ட நேரம் சூடாகவும் நன்றாக இருக்கும்.  

6 /6

சாதத்தை வடித்த பிறகு உடனே மூடி வைத்தால் தண்ணீர் விட்டுவிடும். எனவே, இதனை தடுக்க ஒரு பெரிய தட்டில் கொட்டி ஆறவிட்டு ஹாட் பாக்ஸில் வைத்து பயன்படுத்தலாம்.