தமிழர்களின் கலைத்திறனுக்கு சான்றாக ஜி20 பாரத் மண்டபத்தில் விஸ்வரூப நடராஜர்

Largest Ashtadhatu Nataraja At G20: ஜி20 மாநாடு நடைபெறும் பாரத் மண்டப கூடத்தின் முன்பு, தமிழர்களின் கலைப் பெருமையை பறைசாற்றி நிற்கும் நடராஜர் சிலை

பாரத மண்டபத்தில் உள்ள அற்புதமான நடராஜர் சிலை நமது வளமான வரலாறு மற்றும் கலாச்சாரத்தின் அம்சங்களை உயிர்ப்பிக்கிறது. 

1 /10

டெல்லியில் பிரமாண்டமான முறையில் நடைபெற உள்ள ஜி20 மாநாட்டு மண்டபத்தின் முன்பு தமிழர்களின் பெருமையை பறைசாற்றி நிற்கிறது பிரம்மாண்டமான நடராஜர் சிலை.

2 /10

பாரத மண்டபத்தில் உள்ள அற்புதமான நடராஜர் சிலை நமது வளமான வரலாறு மற்றும் கலாச்சாரத்தின் அம்சங்களை உயிர்ப்பிக்கிறது. ஜி 20 உச்சிமாநாட்டிற்காக உலக நாடுகள் ஒன்று கூடும்போது, இது இந்தியாவின் பழமையான கலைத்திறன் மற்றும் பாரம்பரியங்களுக்கு ஒரு சான்றாக நிற்கும். 

3 /10

தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டம், சுவாமிமலையைச் சேர்ந்த தேவ சேனாதிபதி சிற்ப கலைக்கூடத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் மற்றும் ஸ்ரீகண்டன் சகோதரர்கள் இந்த பிரம்மாண்ட சிலையை உருவாக்கிய கலைஞர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

4 /10

அஷ்டதாது அதாவது  தங்கம், வெள்ளி, தாமிரம், துத்தநாகம், ஈயம், தகரம், இரும்பு மற்றும் பாதரசம் என வெவ்வேறு 8 உலோகங்களின் கலவையிலிருந்து செய்யப்பட்ட நடராஜர் சிலை இது. 

5 /10

சிலைகள், விக்ரகங்கள் மற்றும் கோவில் மணிகள் போன்ற புனித மற்றும் ஆன்மீக பொருட்களை உருவாக்க அஷ்டதாது பயன்படுத்தப்படுத்துவது வழக்கம்

6 /10

ஜி 20 உச்சிமாநாட்டிற்காக உலக நாடுகள் ஒன்று கூடும்போது, இது இந்தியாவின் பழமையான கலைத்திறன் மற்றும் பாரம்பரியங்களுக்கு ஒரு சான்றாக நிற்கிறார் வானளாவிய நடராஜர்

7 /10

27 அடி உயரமும், 18 டன் எடையும் கொண்ட இந்த சிலை, அஷ்டதத்துகளால் ஆன மிக உயரமான நடராஜர் சிலை இது 

8 /10

ராதாகிருஷ்ணன் ஸ்தபதி மற்றும் அவரது குழுவினரால் 7 மாதங்களில் செதுக்கப்பட்டுள்ளது

9 /10

பிரபஞ்ச ஆற்றல், படைப்பாற்றல் மற்றும் சக்தி ஆகியவற்றின் முக்கிய அடையாளமான நடராஜரின் இந்த சிலை G20 உச்சிமாநாட்டில் அனைவரையும் கவரும் ஒரு அம்சமாக இருக்கும்

10 /10

கலாச்சார அமைச்சகத்தின் குழுவான IGNCAவின் திட்டத்தின் வெளிப்பாடாக புதுடெல்லியில் நடராஜர் உயர்ந்து நிற்கிறார்