ஆண்களுக்கு முடி அதிகம் கொட்டுவதற்கு இது தான் காரணம்! இந்த தவறை செய்ய வேண்டாம்!

இன்றைய சூழலில் தலைமுடியை பராமரிப்பது பெரும் சவாலாக உள்ளது. அதிலும் குறிப்பாக ஆண்களுக்கு அதிக பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.

 

1 /6

நீங்கள் என்ன மாதிரியான கூந்தல் பராமரிப்பு பொருட்களைப் பயன்படுத்தினாலும் ஒரு சிலருக்கு முடி கொட்டுவது மற்றும் வறண்டு போவது போன்ற பிரச்சனைகள் இருக்கும்.  

2 /6

தலையில் அதிக எண்ணெய் பசை கொண்ட நபர்கள் அடிக்கடி தலைக்கு குளிக்கின்றனர். இதனால் தலையில் உள்ள அழுக்கு நீங்கும் என்று நினைக்கின்றனர்.   

3 /6

தினசரி தலைக்கு குளிக்க வேண்டும் என்ற எந்த ஒரு அவசியமும் இல்லை. உங்கள் தலைமுடி அழுக்காகவும் அதிக எண்ணெய் பசையாகவும் இருக்கும் போது மட்டும் தலைக்கு குளித்தால் போதும்.  

4 /6

சூடான நீரில் முடியை கழுவ கூடாது. இதனால் முடியில் உள்ள இயற்கையான எண்ணெய்கள் வெளியற வாய்ப்புள்ளது. மேலும் முடி வறண்டும் போகும்.  

5 /6

முடிக்கு ஷாம்பு பயன்படுத்திய பிறகு கண்டிஷனரைப் பயன்படுத்த வேண்டும். இது முடியை ஆரோக்கியமாகவும் ஈரப்பதமாகவும் வைத்திருக்க உதவும்.   

6 /6

ஆண்கள் செய்யும் பொதுவான தவறு தலைக்கு குளித்த பிறகு, முடியை சரியாக பராமரிக்காதது தான். தலைமுடி ஈரமாக இருக்கும்போது சீப்பை பயன்படுத்த கூடாது. முடி காய்ந்த பிறகு பயன்படுத்துவது நல்லது.