இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு இயக்கப்படும் சில ரயில்கள்...!!

உலகின் நான்காவது பெரிய இரயில்வே நெட்வொர்க் ஆகும். இந்திய இரயில்வே நாட்டின் போக்குவரத்துக்கான உயிர்நாடியாக கருதப்படுகிறது. இந்நிலையில் உள்ளூர் பயணம் மட்டுமல்ல, குறிப்பிட்ட சில வெளிநாடுகளுக்கும் ரயில்கள் இயக்கப்படுகின்றன.

இந்தியாவில் தினமும் கோடிக்கணக்கான பயணிகள் ரயிலில் பயணம் செய்கின்றனர். பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு, இந்திய ரயில்வே நாடு முழுவதும் பல ரயில்களை இயக்குகிறது.

1 /8

இந்திய இரயில்வே ஆசியாவின் இரண்டாவது பெரிய இரயில் வலையமைப்பு. உலகின் நான்காவது பெரிய இரயில்வே நெட்வொர்க் ஆகும்.  இந்திய ரயில்வே நாடு முழுவதும் பல ரயில்களை இயக்குகிறது. இதில், இந்தியாவில் இருந்து அண்டை நாடுகளுக்கு நேரடியாக செல்ல 7 ரயில் நிலையங்கள் வழியாக வெளிநாடுகளுக்கு ரயிலில் செல்லலாம்.

2 /8

ராதிகாபூர்: வங்க தேசத்தின் எல்லை மாநிலமான, மேற்கு வங்க மாநிலம் ராதிகாபூர் ரயில் நிலையம், ஜீரோ பாயிண்ட் ரயில் நிலையம் என அழைக்கப்படுகிறது. குறிப்பாக, சரக்கு போக்குவரத்திற்காக, இங்கிருந்து வங்கதேசத்திற்கு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

3 /8

சோக்பானி: பீகாரில் உள்ள சோக்பானி ரயில் நிலையத்தில் இருந்து நேபாளத்திற்கு ரயில்கள் இயக்கப்படுகின்றன. நேபாளத்திற்கு மிக அருகில் உள்ள இந்த ரயில் நிலையம் மூலம் நேபாளத்திற்கு நடந்தே கூட சென்றுவிடலாம். அந்த அளவிற்கு குறைவான தூரத்தில் நேபாள எல்லை உள்ளது.

4 /8

சிங்காபாத்: வங்க தேசத்தின் எல்லை மாநிலமான, மேற்கு வங்க மாநிலம் மால்டா மாவட்டத்தில் இருந்து வங்கதேசத்திற்கு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரயில் மூலம் ரோகன்பூர் வழியாக வங்கதேசத்திற்கு பயணிக்கலாம்.

5 /8

பெட்ராபோல்: வங்க தேசம் மற்றும் இந்தியாவிற்கு இடையிலான ஏற்றுமதி - இறக்குமதிக்கு உதவும் வகையில் பெட்ராபோல் ரயில் நிலையத்தில் இருந்து வங்கதேசத்திற்கு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

6 /8

ஜெய்நகர்: பீகார் மாநிலம் மதுபானியில் இருந்து  இந்தியா - நேபாளத்திற்கு இடையே இயக்கப்படும் ரயில் சேவை மூலம் எளிதாக நேபாளத்திற்கு செல்லலாம். பீகாரில் இருந்து நேபாளத்திற்கு அடிக்கடி செல்லும்  மக்கள் இந்த ரயிலைத் தான் பயன்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

7 /8

ஹல்திபாரி: மேற்கு வங்கத்தின் நியூ ஜல்பாய்குடி ரயில் நிலையத்தில் இருந்து வங்கதேசத்திற்கு ரயில்கள் இயக்கப்படுகின்றன.  அங்கிருந்து சுமார் 4.5 கி.மீ., தூரம் பயணித்தாலே வங்கதேசத்தை அடைந்துவிடலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

8 /8

அட்டாரி: பஞ்சாப் மாநிலத்தில் இருக்கும் அட்டாரி ரயில் நிலையம் மிகவும் பிரபலமான ரயில் நிலையம். வடக்கு ரயில்வேயின் கடைசி ரயில் நிலையமாக இருக்கும் வழியாக பாகிஸ்தானுக்கு சம்ஜவுதா எக்ஸ்பிரஸ் ரயில் வாரத்தில் 2 நாட்கள் இயக்கப்படுகின்றன.