இதுவரை இந்தியாவுக்கு எதிராக முதல் பந்திலேயே அவுட் ஆன இலங்கை வீரர்கள்!

இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதும் 2வது ஒருநாள் போட்டியின் முதல் பந்தியிலே பத்தும் நிசங்க சிராஜிடம் அவுட் ஆகி வெளியேறியுள்ளார்.

 

1 /6

இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதும் இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று கொழும்புவில் உள்ள ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடைபெற்று வருகிறது.  

2 /6

கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி டையில் முடிந்தது. இரண்டு அணிகளும் 230 ரன்கள் அடித்திருந்தது.   

3 /6

இந்நிலையில் இரண்டாவது ஒருநாள் போட்டியில் எப்படியாவது வெற்றி பெற வேண்டுமென்ற நினைப்பில் இரண்டு அணிகளும் இன்று களமிறங்கி  உள்ளது.  

4 /6

இரண்டாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி கேப்டன் முதலில் பேட்டிங் தேர்வு செய்தார். இந்த போட்டியில் முதல் பந்தியிலேயே சிராஜிடம் பத்தும் நிசங்க அவுட் ஆகி வெளியேறினார். இதற்கு முன்பும் இதே போல இலங்கை வீரர்கள் இந்தியாவிற்கு எதிராக முதல் பந்தியிலேயே அவுட் ஆகி உள்ளனர்.   

5 /6

2002 ஆம் ஆண்டு ஜாகிர் கானின் முதல் பந்திலேயே சனத் ஜெயசூர்யா அவுட் ஆகியுள்ளார். மேலும் 2009 மற்றும் 2010 ஆம் ஆண்டில் ஜாகிர் கான் மற்றும் பிரவீன்குமார் ஆகியோரின் முதல் பந்திலேயே உபுல் தரங்கா அவுட் ஆகியுள்ளார்.   

6 /6

2023 ஒரு நாள் உலகக் கோப்பையின் போது பத்தும் நிசங்க முதல் பந்தியிலேயே பும்ராவிடம் அவுட் ஆகி வெளியேற இருந்தார். அதனை தொடர்ந்து தற்போது சிராஜின் முதல் பந்திலே அவுட் ஆகி வெளியேறியுள்ளார்.