தமிழ்நாட்டைப் போலவே மாதாமாதம் பெண்களுக்கு இலவச பணம் கொடுக்கும் மாநிலங்கள்

Women Monthly Free Income Schemes: தமிழ்நாடு அரசின் பிரபலமான கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் போன்ற சில மாதந்தோறும் பணம் கொடுக்கும் திட்டங்களை வேறு சில இந்திய மாநிலங்களும் அமல்படுத்தியுள்ளன. 

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை (Kalaignar Magalir Urimmai Thogai) திட்டம் தொடங்கப்பட்டபோது ஒரு கோடியே 6 லட்சம் பெண்கள் இத்திட்டத்தில் பயனாளிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். தற்போது பயனாளிகளின் எண்ணிக்கை மேலும் அதிகமாகியுள்ளது.

1 /7

தமிழ்நாடு முதல் கர்நாடகா, மத்தியப் பிரதேசம் மற்றும் மேற்கு வங்கம் வரை, அரசியல் கட்சிகள் பெண்களை ஈடுபடுத்த ஒருங்கிணைந்த முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன, பல்வேறு சந்தர்ப்பங்களில் வாக்காளர் எண்ணிக்கையில் ஆண்களை மிஞ்சும் திறனை பெண்கள் கொண்டுள்ளனர்

2 /7

நாடு முழுவதும் உள்ள பல மாநிலங்கள் பெண் வாக்காளர்களைக் கவரும் திட்டங்களைத் தொடங்குகின்றன, ஜனநாயக செயல்பாட்டில் தீவிர பங்கேற்பாளர்களாக அவர்களின் முக்கிய பங்கை அங்கீகரிக்கும் அரசியல் கட்சிகள், பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கின்றன

3 /7

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம்:  2021ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் வாக்குறுதிகளில் குடும்ப தலைவிகளுக்கு முக்கியத்துவம் அளித்து, முக்கிய அறிவிப்பை திமுக வெளியிட்டது. திமுக ஆட்சிக்கு வந்ததும் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் அரசு சார்பில் வழங்கப்படும் என தெரிவித்திருந்தது. அந்தத் திட்டம் தற்போது சில மாதங்களாக மாநிலத்தில் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது

4 /7

ஜனவரி 2023 இல் வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலின்படி, தமிழ்நாட்டில் ஆண் வாக்காளர்களின் எண்ணிக்கையைவிட , பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. 3,15,43,286 பெண் வாக்காளர்கள் மாநிலத்தில் உள்ளனர். அதில் தகுதியுள்ள பெண்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகையை தமிழ்நாடு அரசு வழங்கி வருகிறது

5 /7

லக்ஷ்மி பந்தர் திட்டம் என்பது மேற்கு வங்காளத்தில் உள்ள அரசு மேற்கொண்டுள்ள பெண்களுக்கான உரிமைத்தொகை திட்டம், இது தகுதியான பெண் விண்ணப்பதாரர்களுக்கு நேரடி பலன் பரிமாற்றத்தை வழங்குகிறது. இந்தத் திட்டத்தின் கீழ், தகுதியுடைய பெண்கள் தங்கள் வங்கிக் கணக்கில் ₹500 முதல் ₹1000 வரையிலான மாதந்திர நிதி உதவியைப் பெறுகிறார்கள்.

6 /7

மத்தியப் பிரதேச அரசு ஜனவரி 28, 2023 அன்று மத்தியப் பிரதேசத்தில் "முக்ய மந்திரி லட்லி பெஹ்னா யோஜனா" என்ற திட்டத்தை செயல்படுத்துவதாக அறிவித்து செயல்படுத்தி வருகிறது. 23 முதல் 60 வயது வரையிலான பெண்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகளின் கணக்கில் 1000/- ரூபாய் உண்மையான நேரடி பயனாளி பரிமாற்றம் செய்யப்படுகிறது

7 /7

கர்நாடக அரசால் அறிவிக்கப்பட்ட க்ருஹ லக்ஷ்மி திட்டத்தின்படி, குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.2,000 நிதியுதவி வழங்குகிறது. இத்திட்டத்தின் மூலம் மாநிலத்தில் சுமார் 1.28 கோடி பெண்கள் பயனடைவதாக கூறப்படுகிறது