பங்குனி உத்திர நாளில் சந்திர கிரகணம்... இந்த ராசிகளுக்கு கெடு பலன்கள்

சந்திரகிரகணம் வரும் மார்ச் மாதம் 25ஆம் தேதி, சந்திர கிரகணம் ஏற்பட உள்ளது. இதனால் ஏற்படும் சில அசுப சேர்க்கைகள், சில ராசிகளுக்கு கெடு பலன்களை கொடுக்கும்.

கும்ப ராசியில் சனி மற்றும் செவ்வாய் சேர்க்கை, மீனத்தில் சூரியன் உச்சமடைதல், ராகுவின் அசுப நிலை ஆகியவை சேர்ந்து, சில ராசிகளுக்கு கெடு பலன்களை கொடுக்க உள்ளது.

1 /6

பங்குனி உத்திரம் தினத்தன்று சந்திர கிரகணம் ஏற்படும் உள்ளது. போலி பண்டிகையும் அன்றுதான் கொண்டாடப்படுகிறது. மார்ச் மாதம் 25ஆம் தேதி காலை 10:23 மணிக்கு தொடங்கி 3:02 மணிக்கு முடிவடையும் இந்த சந்திர கிரகணத்தினால் பாதிக்கப்பட போகும் ராசிகளை அறிந்து கொள்ளலாம்.  

2 /6

மேஷ ராசிகளுக்கு, வாழ்க்கையில் பிரச்சனைகள் அதிகரிக்கும். கடினமான சூழ்நிலைகளை எதிர்கொள்ள நேரிடலாம். மன அழுத்தம், மன உளைச்சல் ஏற்படலாம். குடும்பத்தில் நிம்மதியின்மை நிலவும்.  

3 /6

ரிஷப ராசிகளுக்கு அலுவலகத்தில் வேலையில் பிரச்சனைகள் ஏற்படும். அழுத்தம் அதிகரிக்கும். பதவி உயர்வு சம்பள உயர்வு ஆகியவற்றில் திருப்தி இருக்காது. குடும்பத்தில் பிரச்சனை ஏற்படலாம்.

4 /6

கன்னி ராசிகள் தொழில் வியாபாரத்தில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். எதிர்மறை எண்ணங்கள் மனதை ஆக்ரமித்துக் கொள்ளும். உடல் நலப் பிரச்சினைகள் ஏற்படலாம். உறவில் பதற்றம் ஏற்படலாம். பேச்சை கட்டுப்படுத்துவது நல்லது.

5 /6

கும்ப ராசியினருக்கு குடும்பத்தில் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். பேச்சை கட்டுப்படுத்துவது நல்லது. இதனால் சிக்கல்கள் ஏற்படும். உறவுகள் பாதிக்கப்படும். நிதி இழப்பு சஞ்சலத்தை ஏற்படுத்தும்.  

6 /6

மீன ராசிகளுக்கு சந்திர கிரகணம் சாதகமான பலன்களை கொடுக்காது. முதலீடுகளில் எதிர்பார்த்த லாபம் கிடைக்காது. வேலையில் மேலதிகாரி அதிருப்தியை சம்பாதிக்கும் வாய்ப்பு உண்டு. உடல் ஆரோக்கியமும் பாதிக்கப்படும்.