தலைவலி தீராத பிரச்சனையாக உள்ளதா; ‘இவை’ காரணமாக இருக்கலாம்!

சிலருக்கு aஅடிக்கடி தலைவலி ஏற்படும். சிலருக்கு காலையில் எழுந்திருக்கும் போதே தலைவலி ஏற்படும். இந்த நிலையில், அன்றைய நாளையே அது பாதித்து விடக் கூடும். ஆனால் இதனை பெரிய பிரச்சனையாக எடுத்துக் கொள்ளாமல்,  அலட்சியமாக இருக்கின்றனர். ஆனால் இது சாதாரணமானது அல்ல, இதற்குப் பின்னால் பல காரணங்கள் இருக்கலாம். 

1 /4

தூக்கமின்மை காரணமாக அடிக்கடி தலைவலி ஏற்படலாம். அதே சமயம், பலருக்கு மன அழுத்தம் காரணமாகவும், தலைவலி பிரச்சனை அடிக்கடி ஏற்படலாம். இரவு ஷிப்டில் அதிகம் பணிபுரிபவர்களுக்கு இந்த பிரச்சனை அதிகம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

2 /4

இரத்த சோகை: உங்கள் உடலில் இரத்தத்தில் சிவப்பணு குறைவாக இருந்தால், அதாவது ஹூமோகுளோபின் குறைவாக இருந்தால், காலையில் எழுந்தவுடன் தலையில் வலியை உணரலாம். அதே நேரத்தில், உடலில் ஆக்ஸிஜன் குறைவாக இருந்தாலும் தலைவலியுடன் சோர்வு மற்றும் தலைச்சுற்றல் ஏற்படலாம். எனவே அடிக்கடி தலைவலி ஏற்பட்டால், ரத்த பிரிசோதனை செய்து கொள்வது நல்லது.

3 /4

நீரிழப்பு:  காலையில் எழுந்தவுடன் தலைவலி வருவதற்கு தண்ணீர் பற்றாக்குறையும் காரணமாக இருக்கலாம். போதிய அளவு தண்ணீர் குடிக்காததால், காலையில் எழுந்தவுடன் தலைவலி வரலாம்

4 /4

சர்க்கரை அளவு: உங்கள் உடலில் சர்க்கரை அசாதாரணமாக இருந்தால்,  காலை தலைவலி ஏற்படலாம். இது சர்க்கரை அளவு தாறுமாறாக இருப்பதற்கான  அறிகுறியாகும். எனவே, தினமும் காலையில் எழுந்ததும் தலைவலி இருந்தால், உங்கள் சர்க்கரை அளவை சரிபார்க்க வேண்டும். (பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்ளும் முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)