சூரியனின் அருளால் ராஜயோகத்தை அனுபவிக்க போகும் ராசிகள் இவை தான்!

கிரகங்களின் ராஜா என்று அழைக்கப்படும் சூரியன், 30 நாட்களுக்குப் பிறகு, ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு மாறுகிறார். ஆகஸ்ட் 17ம் தேதி அதாவது இன்று,  சூரியன் கடக ராசியை விட்டு சிம்ம ராசியில் பிரவேசிக்கிறார். சூரியன் சிம்ம ராசியில் சஞ்சரிப்பதால், சில ராசிக்காரர்கள் அளப்பரிய பலனைப் பெறுவார்கள். அன்னை மகாலட்சுமியின் ஆசீர்வாதத்தைப் முழுமையாக பெற்று, மகிழ்ச்சி, செழிப்பு, வளம், வெற்றி என அனைத்தையும் பெறுவார்கள்.

1 /5

ரிஷபம்: சூரியன் சிம்ம ராசியில் சஞ்சரிப்பது இந்த ராசிக்காரர்களுக்கு மங்களகரமானதாக இருக்கும். இந்த காலகட்டத்தில் புதிய வாகனம் அல்லது சொத்து வாங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளன. அதே சமயம் உத்தியோகம் போன்றவற்றில் பெயரும் புகழும் கிட்டும். சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். அன்னை மகாலட்சுமியின் ஆசீர்வாதத்தைப் பெறுவீர்கள், மேலும் வாழ்க்கையில் ஒவ்வொரு காரியத்திலும் வெற்றி பெறுவீர்கள்.

2 /5

சிம்மம்: சூரியன் இன்று தனது சொந்த ராசியான சிம்ம ராசியில் பிரவேசிக்க உள்ளார். எனவே, இந்த ராசிக்காரர்களுக்கு இந்தப் பெயர்ச்சி மிகவும் லாபகரமானதாக இருக்கும். சிம்ம ராசிக்காரர்களின் செல்வாக்கு அதிகரிக்கும். உத்தியோகத்தில் முன்னேற்றத்திற்கான அனைத்து வாய்ப்புகளும் உள்ளன. மக்கள் வியாபாரத்தில் நல்ல லாபம் அடைவார்கள். மேலும் பொருளாதார நிலை மேம்படும்.

3 /5

கும்பம்: கும்ப ராசிக்காரர்களுக்கும் இந்த நேரம் நன்றாகவே இருக்கும். கும்ப ராசிக்காரர்களும் சூரியனின் ராசி மாற்றத்தால் பலன் அடைவார்கள். இந்த நேரத்தில் எதிரிகளை எளிதாக வெற்றி பெறுவார்கள். பெயரும் புகழும் அதிகரிக்கும். ஆரோக்கியமும் நன்றாக இருக்கும்.

4 /5

கன்னி: ஜோதிட சாஸ்திரப்படி கன்னி ராசிக்காரர்களுக்கு இக்காலம் மிகவும் பலன் தரும். சூரியன் பெயர்ச்சி காலத்தின் வெளியூர் பயணம் ஏற்படலாம். பெயர்ச்சி காலத்தின் போது தொழில், வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். சூரிய சஞ்சாரம் இவர்களுக்கு அரசு அல்லது வெளிநாட்டில் இருந்து பணம் கொடுக்கும்.

5 /5

தனுசு: தனுசு ராசிக்காரர்களுக்கும் சூரியப் பெயர்ச்சி சுபமே. வேலைத் தொழிலுடன் தொடர்புடையவர்கள் இந்த காலகட்டத்தில் சாதகமான பலன்களைக் காண்பார்கள். சூரியபகவானின் அருளால் எல்லா காரியங்களிலும் வெற்றி பெறுவார்கள். (பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS பொறுப்பேற்காது.)