ஐபிஎல் முடிந்தவுடன் டூர் கிளம்பிய ரோகித் - மாலத்தீவு போட்டோஸ்

ஐபிஎல் பயோ பபிளில் இருந்த ரோகித் சர்மா, ஒருவழியாக குடும்பத்துடன் மாலத்தீவு சென்றுள்ளார் 

 

ஐபிஎல் போட்டியில் லீக் சுற்றுடன் மும்பை அணி வெளியேறியதால், மும்பை வீரர்கள் பயோ பபிளில் இருந்து வீட்டுக்கு திரும்பியுள்ளனர்.

 

1 /5

மும்பை கேப்டன் ரோகித் சர்மா, வீட்டுக்கு சென்ற கையோடு மாலத்தீவு சுற்றுலாவுக்கு சென்றுள்ளார்

2 /5

ஐபிஎல் பயோ பபிள் விதிமுறைகள் இந்த முறை மிகவும் கடுமையாக இருந்தது. இது வீரர்களுக்கு ஒருவிதமான அழுத்தமாகவும் இருந்திருக்கும். இதனால், அடுத்த தொடர்களில் சுறுசுறுப்பாக பங்கேற்க ஓய்வெடுக்க சென்றுள்ளார் ரோகித்

3 /5

அங்கு மனைவி மற்றும் குழந்தையுடன் ஜாலியாக பொழுதை கழித்து வருகிறார். மனைவி மற்றும் குழந்தையோடு ரிலாக்ஸாக பொழுதை கழிக்கும் ரோகித்தின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. 

4 /5

கடல் நீரில் மனைவியோடு கைகோர்த்து நிற்கும் ரோகித், இன்னொரு புகைபடத்தில் குழந்தையோடு தனியாக அமர்ந்திருக்கிறார். 

5 /5

மாலத்தீவு பிரபலங்கள் படையெடுக்கும் மிகவும் பிரலமான சுற்றுலா தளமாக உள்ளது. குறிப்பாக, அரபிக் கடலில் இருக்கும் மாலத்தீவு விரைவில் சென்று சேரக்கூடிய இடமாகவும் இருப்பதால், ரோகித் அந்த இடத்தை தேர்வு செய்துள்ளார்.