நேரத்தை சேமிக்க கற்றுக்கொடுக்கும் 7 புத்தகங்கள்! கண்டிப்பாக படிக்க வேண்டியவை..

Books About Time Management : சில புத்தகங்கள், நமக்கு நேர மேலாண்மை குறித்து சொல்லிக்கொடுக்கும். அவை என்னென்ன புத்தகங்கள் தெரியுமா? 

Books About Time Management : நேரம், காலம் அனைத்துமே யாருக்காகவும் எதற்காகவும் நிற்காது. நேரத்தை விரயம் செய்வது, இப்போது அவ்வளவாக பெரிய விஷயமாக இல்லாமல் தோன்றினாலும், அது பிற்காலத்தில் உங்களை சங்கடப்பட செய்யலாம். எனவே, நேரத்தை சேமிக்க கற்றுக்கொடுக்கும் சில புத்தகங்கள் குறித்து இங்கு பார்ப்போம்.

1 /8

நேர மேலாண்மை என்பது மிகவும் முக்கியமான திறனாகும். இது, உங்களது வாழ்வில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்த உதவும். அதற்கு உங்களுக்கு உதவும் சில புத்தகங்கள் குறித்து இங்கு பார்ப்போம். 

2 /8

தி ஒன் திங்: கேரி கெல்லர் மற்றும் ஜே பாபசன் எழுதியிருக்கும் புத்தகம், தி ஒன் திங், இந்த புத்தகம், நம் வாழ்வில் எது முக்கியம் என்பதை நாம் உணர்ந்து கொள்வதற்கு உதவும். 

3 /8

தி நவ் ஹேபிட்: தி நவ் ஹேபிட் புத்தகத்தை, நீல் ஃபியோர் எழுதியிருக்கிறார். இது, நாம் வேலைகளை தள்ளிப்போடும் குணம் கொண்டவராக இருந்தால், இந்த புத்தகம் அந்த பழக்கத்தை களைய உதவும்.

4 /8

கெட்டிங் திங்க்ஸ் டன்: இந்த புத்தகம், அனைவரும் கண்டிப்பாக படிக்க வேண்டிய புத்தகங்களுள் ஒன்று  கெட்டிங் திங்க்ஸ் டன். வாழ்வையும் நேரத்தையும் எப்படி கையாள வேண்டும் என்பதை இதை வைத்து கற்றுக்கொள்ளலாம். இதனை டேவிட் ஆலன் எழுதியிருக்கிறார். 

5 /8

ஃபோர் தௌசண்ட் வீக்ஸ்: ஆலிவர் பர்க்மென் எழுதியிருக்கும் புத்தகம், ஃபோர் தௌசண்ட் வீக்ஸ். இந்த புத்தகம், நாம் எந்த வேலையை முதன்மை படுத்த வேண்டும், எந்த வேலையை ப்ப்புரிந்து கொண்டு செய்ய வேண்டும் என்பதை இந்த புத்தகம் கற்றுக்கொடுக்கும். 

6 /8

ஃபர்ஸ்ட் திங்க்ஸ் ஃபர்ஸ்ட்: ஸ்டீஃபன் கவி எழுதியிருக்கும் புத்தகம், ஸ்டீஃபன்.ஆர். இந்த புத்தகம், நமது வாழ்வு குறித்த புரிதலை நமக்கு உணர்த்தும். அது மட்டுமன்றி, வாழ்வில் நேரம் எவ்வளவு முக்கியமானது என்பதையும் காண்பிக்கும். 

7 /8

ஈட் தட் ஃப்ராக்: ஈட் தட் ஃப்ராக் புத்தகத்தில், ஒரு வேலையை தள்ளிப்போடுவதில் இருந்து நம்மை விடுவித்துக்கொள்ள 21 வழிகள் காண்பிக்கப்பட்டிருக்கும். நேரத்தை வீணடிக்கும் பேர்வழிகளுக்கு, இந்த புத்தகம் கண்டிப்பாக உதவும். 

8 /8

அட்டாமிக் ஹேபிட்ஸ்: அட்டாமிக் ஹேபிட்ஸ் புத்தகத்தை, ஜேம்ஸ் க்ளியர் எழுதியிருக்கிறார். இது, நேரத்தின் ஆளுமை குறித்தும், அது நமது கையில் இருப்பதால் நமக்கு கிடைக்கும் சக்தி குறித்தும் எடுத்துரைக்கும்.