மாதம் 80000 சம்பாதிக்க 5000 ரூபாய் முதலீடு போதும்! நம்பகமான தொழில் வாய்ப்பு

Post Office Franchise Scheme: போஸ்ட் ஆபிஸ் திட்டத்தில் ஒருமுறை ரூ.5,000 முதலீடு செய்து நல்ல வருமானம் ஈட்டலாம். நீங்க ரெடியா?

சொந்த தொழில் தொடங்க ஆர்வமுள்ள தனிநபர்களுக்கு, இந்திய மக்களுக்கு அஞ்சல் துறை பலதரப்பட்ட சேவைகளை வழங்குகிறது.

1 /7

தபால் நிலைய திட்டங்களில் மட்டுமின்றி, தபால் நிலைய ஃப்ரான்சைசிஸ் உரிமையைப் பெற்றும் வருமானம் ஈட்டலாம். இதற்கு செய்ய வேண்டிய முதலீடும் குறைவு  

2 /7

தபால் நிலையத்தின் மூலம் மக்கள் தற்போது பல வசதிகளைப் பெறுகின்றனர். தபால் அலுவலகங்கள் என்பது கிராமப்புற மக்களுக்கு வங்கி சேவைகளை வழங்குகின்றன

3 /7

எல்லா இடங்களிலும் தபால் நிலையத்தை தொடங்க முடியாது என்பதால், தனிநபர்கள் அல்லது ஒரு குழுவுக்கோ ஃப்ரான்சைசிஸ் வழங்கப்படுகிறது. எப்படி தபால் நிலைய ஃப்ரான்சைசிஸ் உரிமையை எடுக்கலாம் என்பதை தெரிந்துகொள்ளலாம்.

4 /7

18 வயதுக்கு அதிகமான இந்தியர்கள் அங்கீகரிக்கப்பட்ட பள்ளியில் இருந்து 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஃப்ரான்சைசிஸ் படிவத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.

5 /7

இந்திய அஞ்சல் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும். தபால் நிலைய சேவைகளுக்கு கிடைக்கும் கமிஷன் தொடர்பான இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும்.

6 /7

பதிவு செய்யப்பட்ட போஸ்டுக்கு 3 ரூபாய், ஸ்பீட் போஸ்டுக்கு செய்தால் 5 ரூபாய், 100 முதல் 200 ரூபாய் வரையிலான மணி ஆர்டர்களுக்கு 3.50 ரூபாய், 200 ரூபாய்க்கு மேல் மணி ஆர்டர்களுக்கு 5 ரூபாய், பதிவு மற்றும் ஸ்பீட் போஸ்ட்டிற்கு மாதம் 1000 ரூபாய் என கமிஷன் கிடைக்கும்.

7 /7

தபால் துறையின் (https://www.indiapost.gov.in/VAS/DOP_PDFFiles/Franchise.pdf) என்ற அதிகாரப்பூர்வ தளத்தில் கிளிக் செய்யலாம். தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் அஞ்சல் துறையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும். இதன் பின்னரே வாடிக்கையாளர்களுக்கு வசதிகளை வழங்கலாம்.