நீங்கள் வசீகரமான நபரா இல்லையா? ‘இந்த’ அறிகுறிகள் இருக்கான்னு பாருங்க!

Signs That You Are Attractive : ஒரு சிலருக்கு நாம் வசீகரமாக இருக்கிறோமா இல்லையா என்ற சந்தேகம் இருக்கும். அவர்களிடம், ‘இது’ போன்ற அறிகுறிகள் இருக்கும். அவை என்னென்ன தெரியுமா?

Signs That You Are Attractive :  ஒரு சிலருக்கு, நாம் வசீகரமான நபராக இருக்கிறோமா இல்லையா என்ற சந்தேகம் இருக்கும். எப்போதாவது உங்களை ஒருவர் பார்த்துக்கொண்டே இருப்பது போல உணர்ந்து இருக்கிறீர்களா ? அப்போது உங்களிடம் ஏதேனும் பிரச்சனை இருக்கிறதோ என்ற சந்தேகம் உங்களுக்கு எழும். ஆனால், இதை சில சமயங்களில் நீங்கள் தவறாக புரிந்து கொண்டிருப்பீர்கள். நீங்கள் வசீகரமிக்க நபராக இருந்தால் கூட, உங்களை பலர் அப்படி பார்த்துக்கொண்டே இருப்பர். இதே போல, பல அறிகுறிகள் இருக்கின்றன. அவை என்னென்ன தெரியுமா?

1 /8

ஒரு சிலரை பார்க்கும் போது, அவரகளிடம் ஏதோ ஒன்று வசீகரமாக இருக்கும். அது என்ன என்று உங்களுக்கே தெரியாது. அப்படிப்பட்ட நபர்களுள் நீங்களும் ஒருவராக இருக்கலாம். இதோ அதற்கான அறிகுறிகள்!

2 /8

உங்களது இருப்பு, கவனிக்கத்தக்கதாக இருக்கும். நீங்கள் ஒரு இடத்தில் இருந்தாலே அங்கிருக்கும் அனைவரும் உங்களை பார்ப்பார்கள். நீங்கள் ஒரு இடத்தில் இருக்கிறீர்கள் என்றால், அந்த இடத்தில் இருக்கும் அனைவருக்குமே அந்த இடம் வித்தியாசமாக தோன்றும். 

3 /8

கருத்துக்கு மதிப்பு: ஒரு விவாதத்தில் அல்லது ஏதேனும் ஒரு சூழலில் பேச வேண்டிய சூழல் வரும் போது, நீங்கள் கூறும் கருத்துக்கு கவனிக்கத்தக்க மதிப்பு கொடுக்கப்படும். 

4 /8

தெரியாதவரிடமிருந்து புன்னகை: யாரென்றே தெரியாத நபரும் கூட, நீங்கள் அவருக்கு தெரிந்த நபர் போல உங்களை பார்த்து சிரிப்பார். அது, எந்த வகையிலும் பொய்யான புன்னகையாக இருக்காது. 

5 /8

உங்களிடமே வந்து பேசுவர்: நீங்கள், யாரிடமும் சென்று பேச வேண்டும் என்ற அவசியம் இல்லை. உங்களிடமே வந்து பலர் உரையாடுவர். உங்களுக்கும் அவர்கள் பேசும் விஷயத்திற்கும் சம்பந்தமே இல்லை என்றாலும் கூட அவர்கள் ஏதேனும் ஒரு டாப்பிக்கை கொண்டு உங்களிடம் வந்து பேசுவர். 

6 /8

புகழ்ச்சி: நீங்கள் உடுத்தும் உடை குறித்து, நீங்கள் பேசும் விதம் குறித்து, உங்களது குரல் குறித்து என பல்வேறு விஷயத்திற்காக உங்களுக்கு பாராட்டு அல்லது புகழ்ச்சி கிடைக்கும். 

7 /8

குழந்தைகள் சிரிக்கும்: உங்களை பார்த்து வயதானவர்கள் அல்லது சிறு குழந்தைகள் புன்னகைப்பர். 

8 /8

உங்கள் மீது யாருடைய கண்ணாவது இருந்து கொண்டே இருக்கும். எங்கு சென்றாலும் ஏதாவது ஒரு கண் உங்களை பார்த்துக்கொண்டே இருக்கும். அவர்கள் உங்களை பார்க்கையில் நீங்கள் அதை பார்த்து விடுவீர்கள்.