உங்கள் வீட்டிற்கு அதிர்ஷ்டத்தை கொண்டு சேர்க்கும் செல்ல பிராணிகள் ..!!

சில விலங்குகள் மற்றும் பறவைகளை வீட்டில் வளர்ப்பது மங்களகரமானதாக கருதப்படுகிறது. இந்த விலங்குகள் மற்றும் பறவைகள் வீட்டில் மகிழ்ச்சியையும் செழிப்பையும் கொண்டு வருவதாக நம்பப்படுகிறது. 

1 /5

பைரவரின் வேலைக்காரனாக நாய் கருதப்படுகிறது. நாயை வளர்ப்பதன் மூலம் லட்சுமி தேவி வீட்டில் வசிப்பதாக நம்பப்படுகிறது. மேலும், பண வரவு உண்டாகும் வழி திறக்கிறது. இது தவிர, நாய் குடும்ப உறுப்பினர்களுக்கு ஏற்படும் ஆபத்துக்களையும் நெருக்கடியையும் தானே எடுத்துக்கொள்வதாக கூறப்படுகிறது.

2 /5

வீட்டில் மீன் வளர்ப்பது மங்களகரமானது. மீன் வளர்ப்பதன் மூலம் வீட்டின் வறுமை நீங்கும். இதனுடன், வீட்டில் நேர்மறை ஆற்றல் ஏற்படும். தங்க நிற மீன்களை வளர்ப்பது மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது.

3 /5

குதிரை வளர்த்தால் அதிர்ஷ்டம் பெருகும். குதிரை மிகவும் கடினமாக உழைக்கும் என்பதோடு, மிகவும் புத்திசாலித்தனமான விலங்கு. குதிரையை வலர்க்க முடியாவிட்டால், குறைந்தது ஒரு குதிரையின் படம் அல்லது சிலையை வைத்தாலும் நல்ல பலன் கிடைக்கும்.

4 /5

ஆமையும்  அதிர்ஷ்டம் கொடுக்கும். ஆமை வீட்டில் தங்கினால் அனைத்து வேலைகளும் வெற்றி பெறும் என்பது நம்பிக்கை. அதுமட்டுமல்லாமல் வீட்டில் அன்னை லட்சுமியின் அருள் கிடைக்கும்.

5 /5

முயல் மகிழ்ச்சி மற்றும் செழிப்பின் சின்னமாக கருதப்படுகிறது. ஒரு முயல் வளர்ப்பதன் மூலம், வீட்டின் எதிர்மறை ஆற்றல் நீக்கும். அதை வளர்ப்பதன் மூலம் வீட்டில் மகிழ்ச்சி நிலைத்திருக்கும். (பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS அதை உறுதிப்படுத்தவில்லை.)