கும்பத்தில் திரிகிரஹி யோகம்... பட்டையை கிளப்ப போகும் 3 ராசிகள்..!!

Thrigrahi yog in kumbam & LUcky Zodiacs: கிரகங்களின் பெயர்ச்சிகள் மட்டுமல்லாது, அந்த கிரக பெயர்ச்சிகளால் உருவாகும் சேர்க்கைகளும், மாற்றங்களும், அனைவரின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

மார்ச் மாதத்தில், பல முக்கிய கிரகங்கள் பெயர்ச்சியாக இருக்கும் நிலையில், அதனால் சில கிரகங்கள் சந்தித்துக் கொள்கின்றன. இந்த சந்திப்பு சில ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுப்பதாக இருக்கும்.

1 /7

கர்ம வினைகளுக்கு ஏற்ப பலனை வழங்குவதால், நீதி கடவுள் என்று அழைக்கப்படும் சனி பகவான் தற்போது கும்பத்தில் இருக்கிறார். தற்போது அஸ்தம நிலையில் இருக்கும் சனி பகவான், மார்ச் மாதம் 18ஆம் தேதி உதயமாவார்.

2 /7

சூரியன் கும்ப ராசியில் இருக்கிறார். கிரகங்களின் ராஜா என்று அழைக்கப்படும் சூரியன், மாசி மாதத்தில் கும்ப ராசியில் சஞ்சரிப்பதால், இது கும்ப மாதம் என்றும் அழைக்கப்படுகிறது.

3 /7

ஞானத்தை அள்ளிக் கொடுப்பவர் ஆன புதன் பகவான், தற்போது கும்ப ராசியில் வீட்டில் இருக்கிறார். இந்நிலையில் கும்ப ராசியில் சூரியன் புதன் சனிபகவான் இணைந்திருப்பது, சில ராசிகளுக்கு பெரும் அதிர்ஷ்டம் இருக்கும்.

4 /7

மேஷ ராசிக்காரர்களுக்கு சனி புதன் சூரியன் இணைவது பண லாபத்தை கொடுக்கும். வேலை செய்யும் இடத்தில் சந்தித்து வந்த பிரச்சனைகள் எல்லாம் தானாகவே தீர ஆரம்பிக்கும். சக ஊழியர்களின் ஆதரவும் மேலதிகாரியும் பாராட்டும் கிடைக்கும். குடும்பத்தில் இன்பம் நிலைத்திருக்கும்.

5 /7

புதன் பெயர்ச்சியினால் உருவாகும் சனி புதன் சூரியன் இணைவு கடக ராசிக்காரர்களுக்கு பலன்களை அள்ளிக் கொடுக்கும். குழந்தைகள் தரப்பிலிருந்து நல்ல செய்தி வரும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பணவரவு காரணமாக நிதி சிக்கல்களில் இருந்து விடுபடுவீர்கள்.

6 /7

சிம்ம ராசியினருக்கு புதன் அருளால் தடைபட்ட வேலைகள் அனைத்தும் வேகம் தரும். சனிபகவான் வாழ்க்கையில் வெற்றிகளை அள்ளிக் கொடுப்பார். மதிப்பும் மரியாதையும் சமூகத்தில் உயரும் புதன் மற்றும் சூரியனின் தாக்கத்தால், எடுத்த காரியம் அனைத்தும் வெற்றி பெறும். பணவரவு மனதிற்கு மகிழ்ச்சி கொடுக்கும்.  

7 /7

பொறுப்புத் துறப்பு:  இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.