கோயம்புத்தூரில் உள்ள இந்த ரகசிய இடங்களை சுற்றிப்பார்க்க மறக்காதீங்க!

தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படும் கோயம்புத்தூரில் நிறைய சுற்றுலா தளங்கள் உள்ளன. இங்குள்ள சில சுற்றுலாத் தலங்கள் அனைவருக்கும் தெரிந்தவை என்றாலும், பலருக்கும் தெரியாத இடங்களை தெரிந்து கொள்ளுங்கள்.

 

1 /6

வைதேகி  நீர்வீழ்ச்சி நரசிபுரம் கிராமத்தைச் சுற்றியுள்ள மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் வைதேஹி அருவி அமைத்துள்ள்ளது. இயற்கையை ரசிப்பதற்கும், தண்ணீரில் விளையாடுவதற்கும் இது ஒரு சிறந்த இடமாக இருப்பதால் பலரும் இங்கு செல்கின்றனர்.   

2 /6

கோவை குற்றாலம் அருவி சிறுவாணிக்கு அருகில் அமைந்துள்ளது இந்த அழகிய கோவை குற்றாலம் அருவி. சுத்தமான காற்றையும் தண்ணீரின் சத்தத்தையும் அனுபவிக்க மக்கள் இங்கு செல்கிறார்கள்.   

3 /6

குரங்கு நீர்வீழ்ச்சி பொள்ளாச்சி நகருக்கு வெளியே குரங்கு நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. ஏராளமான மரங்களுக்கும், மலைக்கும் இடையில் இந்த நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. நிறைய குரங்குகள் இங்கு வாழ்வதால் இது குரங்கு நீர்வீழ்ச்சி என்று அழைக்கப்படுகிறது.  

4 /6

சிறுவாணி அணை சிறுவாணி அணை அந்த பகுதிகளில் பெரிய நீர் தடுப்பாக உள்ளது, இது அருகிலுள்ள நகரங்களில் உள்ள மக்களுக்கு குடிநீர் வழங்க உதவுகிறது. மேற்குத் தொடர்ச்சி மலைகளின் அடிவாரத்தில் சிறுவாணி என்ற இடத்திற்கு அருகில் கட்டப்பட்டுள்ளது.  

5 /6

சிங்காநல்லூர் ஏரி கோயம்புத்தூரில் உள்ள சிங்காநல்லூர் ஏரியில் உங்களால் வாத்துகள் மற்றும் பறவைகளை அதிகளவில் பார்க்க முடியும். மாலை நேரத்தில் இயற்கையை ரசிக்கவும், வேடிக்கை பார்க்கவும், படகு சவாரி செய்வும் செல்லலாம்!  

6 /6

மருதமலை முருகன் கோயில் மேற்குத் தொடர்ச்சி மலையின் நடுவில் உள்ள மருதமலையில் அமைத்துள்ளது அருள்மிகு முருகன் கோவில். இங்கு முருகப்பெருமானை தரிசிக்கவும், இயற்கை அழகை காணவும் மக்கள் வருகின்றனர்.