மீண்டும் தோனி மீது பழைய வன்மத்தை கொட்டிய யுவராஜ் சிங்!

இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் தனது ஆல் டைம் பிளேயிங் லெவன் அணியை தேர்வு செய்துள்ளார். ஆனால் அதில் தோனியின் பெயரை சேர்க்கவில்லை.

1 /6

இந்திய அணியின் முன்னாள் கேப்டனான தோனி இந்திய கிரிக்கெட் வரலாற்றில் வெற்றிகரமான கேப்டனாக உள்ளார். மூன்று ஐசிசி கோப்பைகளையும் வென்ற ஒரே கேப்டன் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

2 /6

தற்போது யுவராஜ் சிங் அவரது ஆல் டைம் சிறந்த அணியை தேர்வு செய்துள்ளார். அதில் டாப் ஆர்டரில் சச்சின் டெண்டுல்கர், ரிக்கி பாண்டிங், ரோஹித் சர்மா ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.

3 /6

மேலும் மிடில் ஆர்டரில் விராட் கோலி, ஏபி டி வில்லியர்ஸ், விக்கெட் கீப்பராக கில்கிறிஸ்ட் இடம் பெற்றுள்ளனர். ஆண்ட்ரூ பிளின்டாஃப் ஆல்ரவுண்டராக இடம்பெற்றுள்ளார்.

4 /6

வேகப்பந்து வீச்சாளர்களாக வாசிம் அக்ரம், கிளென் மெக்ராத் ஆகியோரை தேர்வு செய்துள்ளார். சுழற்பந்து வீச்சாளர்களாக ஷேன் வார்னே மற்றும் முத்தையா முரளிதரன் ஆகியோரை தேர்வு செய்துள்ளார்.

5 /6

லெஜண்ட்ஸ் கிரிக்கெட் உலக சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்திய பிறகு யுவராஜ் தனது ஆல்-டைம் சிறந்த பிளேயிங் அணியை தெரிவித்துள்ளார்.

6 /6

உலகின் மிக சிறந்த கேப்டனாகவும், சிறந்த ஃபினிஷர்களில் ஒருவராகவும் இருக்கும் தோனியை பழைய வன்மத்தின் காரணமாக யுவராஜ் தேர்வு செய்யவில்லை என்று ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.