கடந்த ஆண்டு கோரமண்டல்! இந்த ஆண்டு காஞ்சன்ஜங்கா! பாதுகாப்பற்றதாக மாறும் ரயில்வே?

Kanchanjungha Express: கோரமண்டல் ரயில் விபத்து நடைபெற்று ஓர் ஆண்டு முடிவைத்துள்ள நிலையில் இன்று காஞ்சன்ஜங்கா ரயில் விபத்து ஏற்பட்டுள்ளது.

 

1 /6

இன்று மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங் மாவட்டத்தில் கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் சரக்கு ரயிலுடன் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இது ரயில்வே பாதுகாப்பு குறித்து கவலையை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.   

2 /6

நியூ ஜல்பைகுரி நிலையத்திற்கு அருகில் உள்ள ரங்கபாணி அருகே இன்று காலை 9 மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டது. சரக்கு ரயில் சிக்னலை மீறி கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸின் பின்பகுதியில் மோதியதால், தடம் புரண்டு விபத்து ஏற்பட்டுள்ளது.  

3 /6

சரக்கு ரயில் சிக்னலை மீறியதால் கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் மீது மோதியதாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளன. கோரமண்டல் எக்ஸ்பிரஸ் விபத்தை இந்த சம்பவம் நினைவுபடுகிறது.   

4 /6

கடந்த ஆண்டு ஜூன் 2023ல் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் விபத்துக்குள்ளாகி பெரும் உயிர் சேதத்தை ஏற்படுத்தியது. இந்தியாவின் மோசமான ரயில்வே விபத்துகளில் கோரமண்டல் விபத்தும் ஒன்றாகும். அந்த  விபத்தில் 293 பயணிகளின் உயிரை பறிகொடுத்தும், 1100 பேர் காயமடைந்தனர்.  

5 /6

எதிர்காலத்தில் இதுபோன்ற கொடூர சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க தகவல் தொடர்பு அமைப்புகளில் உள்ள சிக்கல்களை உடனே சரி செய்ய வேண்டும் என்று பல்வேறு அமைப்பினர் கோரிக்கை வைத்துள்ளனர்.  

6 /6

கவாச் மேம்படுத்தப்பட வேண்டும்: கவாச் இந்திய ரயில்வேயால் உருவாக்கப்பட்ட தானியங்கி ரயில் பாதுகாப்பு அமைப்பு, ரயில் நடவடிக்கைகளின் பாதுகாப்பை மேம்படுத்த வடிவமைக்கப்பட்டுள்ளது. கவாச் லோகோ பைலட்டுகளுக்கு ஆபத்தில் சிக்னல் கொடுக்கும் மற்றும் வேகத்தை குறைக்க உதவும்.