5 நாள் பயண முடிவில் இந்தியா புறப்பட்டார் பிரதமர் மோடி!

5 நாள் சுற்றுப்பயணமாக தெற்கு ஆசிய நாடுகளுக்கு சென்ற பிரதமர் மோடி பயணத்தை முடித்துக்கொண்டு இந்தியா புறப்பட்டார்! 

Last Updated : Jun 2, 2018, 05:27 PM IST
5 நாள் பயண முடிவில் இந்தியா புறப்பட்டார் பிரதமர் மோடி! title=

5 நாள் சுற்றுப்பயணமாக தெற்கு ஆசிய நாடுகளுக்கு கடந்த மாதம் 25-ஆம் நாள் இந்தோனேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு பிரதமர் மோடி பயணம் மேற்கொண்டார். இந்த பயணத்தின் ஒருபகுதியாக  நேற்று சிங்கப்பூர் சென்றுள்ள அவர் இந்தியாவில் முதலீடு செய்ய வருமாறு அவர் சிங்கப்பூர், மலேசிய தொழிலதிபர்களுக்கு அழைப்பு விடுத்தார்.

முன்னதாக மலேசிய பிரதமர் மகாதீர் முகமதுவை சந்தித்து பேசிய அவர் இந்தியாவிற்கும் மலேசியாவிற்குமான நட்புறவை பலப்படுத்துவது குறித்து ஆலோசித்தார். மலேசியாவை அடுத்து சிங்கப்பூர் சென்ற அவருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமரை வரவேற்று இந்திய வம்சாவளியினர் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பயணத்தின் ஒரு பகுதியாக மாலை, சிங்கப்பூர் மெரினா பே சாண்ட்ஸ் கருத்தரங்க மையத்தில் அமைக்கப்பட்டுள்ள தொழில்நுட்ப கண்காட்சியை பார்வையிட்டார். இதனையடுத்து தொழில் முனைவோருடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியிலும் பங்கேற்றார். பிரதமரை வரவேற்கும் விதமாக இந்திய கலாச்சார நடனங்களுடன் கலைநிகழ்ச்சிகள் அரங்கேற்றப்பட்டன. 

இதையடுத்து பிரதமர் மோடி சிங்கப்பூர் சென்றார். நேற்று அவர் அந்நாட்டு பிரதமர் லீ சியன் லூங்கை சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.  சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் மற்றும் மோடி ஆகியோருக்கு இடையே நடந்த சந்திப்பின் போது 8 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. 

இந்தநிலையில், 5 நாள் வெளிநாட்டு பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் நரேந்திர மோடி இந்தியா புறப்பட்டுள்ளார் என்பது குறிபிடத்தக்கது.

Trending News