இணையவாசிகளின் உள்ளம் கவர்ந்த இந்த வார டாப் 5 வைரல் வீடியோக்கள்!!

சிரிப்பு, சந்தோஷம், கோபம், கொந்தளிப்பு, ஆச்சரியம், அதிர்ச்சி, சோகம், கண்ணீர் என நாமே மறந்துவிட்ட பல வித உணர்ச்சிகளை சில வைரல் வீடியோக்கள் நம் உள் மனதிலிருந்து வெளிக்கொண்டு வருகின்றன.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 22, 2022, 08:33 PM IST
இணையவாசிகளின் உள்ளம் கவர்ந்த இந்த வார டாப் 5 வைரல் வீடியோக்கள்!! title=

சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. இணையத்தில் நாம் காணும் வீடியோக்கள் நம்மை வெவ்வேறு உணர்ச்சிகளில் மூழ்கடிக்கச் செய்கின்றன. சிரிப்பு, சந்தோஷம், கோபம், கொந்தளிப்பு, ஆச்சரியம், அதிர்ச்சி, சோகம், கண்ணீர் என நாமே மறந்துவிட்ட பல வித உணர்ச்சிகளை இவை நம் உள் மனதிலிருந்து வெளிக்கொண்டு வருகின்றன.

அவ்வகையில், கடந்த வாரம் இணைய வாசிகளின் உள்ளம் கவர்ந்த சில வைரல் வீடியோக்களின் (Viral Video) தொகுப்பை இந்த பதிவில் காணலாம்.

வனத்துறையினருக்கு தண்ணி காட்டி பாடாய் படுத்திய சிறுத்தை!! 

கோவை மாவட்டம் மதுக்கரை ஒட்டிய  வனப்பகுதியில் இருந்து  கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளியேறிய மூன்று வயது மதிக்கதக்க ஆண் சிறுத்தை குனியமுத்தூர் பகுதியில்  உள்ள குடோனில் பதுங்கிக் கொண்டது. இது குறித்து தகவலறிந்த வனத்துறையினர் சிறுத்தையை உயிருடன் பிடிக்க முயற்சிகள் மேற்கொண்டனர்.  குடோனை சுற்றி வலை விரிக்கப்பட்டும், குடோனில் 2 வாயில்களிலும் இரண்டு கூண்டுகள் வைத்தும்  சிறுத்தையை பிடிக்க முயற்சி மேற்கொண்டனர். சிசிடிவி கேமராக்கள் மூலமும் சிறுத்தையின் நடமாட்டம் கண்காணிக்கப்பட்டது.

5 நாட்களாக குடோனில் பதுங்கி இருந்து, பிடிபடாமல் படுத்தி எடுத்த சிறுத்தை நேற்று நள்ளிரவில் கூண்டிற்குள் வந்த போது சமயோசிதமாக செயல்பட்ட வன ஊழியர்கள் கூண்டை மூடி சிறுத்தையை பிடித்தனர். இதனையடுத்து சிறுத்தையை பத்திரமாக அடர் வனப்பகுதிக்குள் கொண்டு சென்றுவிட வனத்துறையினர் திட்டமிட்டுள்ளனர். சிறுத்தை இப்போது பிடிக்கப்பட்டு விட்டாலும், 5 நாட்களாக வனத்துறையினரின் பிடியில் சிக்காமல் அவர்களுக்கு தண்ணி காட்டிய சிறுத்தை நீண்ட நாட்கள் நம் நினைவில் இருக்கும்!!

சிறுத்தை பிடிபடாமல் டிமிக்கி கொடுத்த போது எடுக்கப்பட்ட வீடியோ

வார்னரையும் விட்டுவைக்காத புஷ்பா!!

அல்லு அர்ஜூன் - ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியான 'புஷ்பா தி ரைஸ்' திரைப்படம் (Pushpa Film) மாஸ் ஹிட் அடித்தது. திரையிட்ட இடங்களில் எல்லாம் ஏகோபித்த வரவேற்பை பெற்ற அந்தப் படம், வசூல் மழையிலும் நனைந்தது. தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியான இந்த திரைப்படத்தில் அல்லு அர்ஜூனின் கெட்டப் மற்றும் பாடலும் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்தது. கிரிக்கெட் வீரர் ரவீந்தர் ஜடேஜாவும் புஷ்பா லுக்கில் புகைப்படம் ஒன்றை சமூகவலைதளத்தில் வெளியிட்டிருந்தார். 

இந்நிலையில், இந்தப் படத்தில் பாடலான ‘ஸ்ரீவள்ளி’ பாடலுக்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் நடனமாடி இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்டுள்ளார். சித் ஸ்ரீராம் பாடியிருக்கும் அந்தப் பாடலுக்கு அல்லு அர்ஜூன் கெட்டப் போட்டு அவர் ஆடும் ஆட்டம் ரசிகர்களை வெகுவாக ஈர்த்துள்ளது. அதிலும், வலது பக்கமாக நடந்து செல்லும்போது, வார்னரின் செருப்பு கழன்றுவிடுவது, காண்போரை சிரிக்க வைத்துவிடுகிறது. இதுவரை சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த வீடியோவை லைக் செய்துள்ளனர். பலர் இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்து வருகின்றனர்.

பக்காவா பைக் ஓட்டி, பந்தாபா தன் திருமணத்துக்கு வந்த மணப்பெண்!!

சமீப காலங்களில் திருமண வீடியோக்கள் (Wedding Video) இணையத்தில் பட்டையைக் கிளப்பி வருகின்றன. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தை கலக்கி வருகின்றது. பொதுவாக தன்னுடைய திருமணத்தில் தன்னுடைய வருகை ஒரு பிரம்மாண்டமான முறையில் இருக்க வேண்டும் என திருமணம் புரிந்துகொள்ளும் மணமகள் நினைப்பது வழக்கம். வெட்கப்பட்டு, குனிந்த தலையுடன் தான் மணமகள் வர வேண்டும் என்ற சிந்தனை பழங்கால சிந்தனையாகி விட்டது.

தற்போது மணம் புரியும் பெண்கள், வழக்கமான பாணியை புறக்கணித்து புதுப்புது விதங்களில் திருமண மண்டபத்துக்கு வரத்தொடங்கியுள்ளார்கள். மிகவும் மகிழ்ச்சியாக திருமண மண்டபத்துக்கு பைக்கை ஓட்டிக்கொண்டு வரும் ஒரு பெண்ணின் வீடியோ வைரலாகி வருகின்றது. 

இந்த வீடியோவில், மணமகள் சிவப்பு நிற லெஹங்கா மற்றும் நகைகளை அணிந்து சாலையில் புல்லட் ஓட்டிக்கொண்டு வருவதைக் காண முடிகின்றது. படு கூலாக தன் திருமணத்துக்கு வரும் பெண்ணின் அணுகுமுறை இணையவாசிகளை கவர்ந்துள்ளது. 

இறந்த புலிக்கு இறுதிச்சடங்கு: கண்களை ஈரமாக்கிய நிகழ்வு!!

மத்திய பிரசேதத்தின் பென்ச் புலிகள் காப்பகத்தின் பெண் புலி வயது மூப்பின் காரணமாக உயிரிழந்தது. இறந்துபோன புலிக்கு சம்பிரதாயப்படி இறுதி சடங்குகள் நடத்தும் மனிதாபிமானத்தை இந்தியாவைத் தவிர வேறெங்கே காண முடியும்?

டி-15 என்றும் அழைக்கப்படும் இந்தப் புலி, 2008 முதல் 2018 வரை 11 ஆண்டுகளில் 8 பிரசவங்களில் மொத்தம் 29 குட்டிகளைப் பெற்றெடுத்தது. புலியின் இறுதிச் சடங்கில் உள்ளூர் மக்கள் பலர் கலந்துகொண்டதை சமூக ஊடகங்களில் வெளியாகும் படங்களில் காணலாம். இந்த இறுதிச் சடங்கின் வீடியோவும் சமூக ஊடகங்களில் வைரல் ஆனது.

சொன்னதை சொல்லும் கிளிப்பிள்ளை இங்கே ‘iPhone’ ட்யூனை இசைக்கிறது..!!!!

கிளிகள் மிகவும் அழகான பறவைகள்  என்பதோடு, பேசும் திறன் பெற்றவை, மனிதர்களை காப்பியடித்து பேசுவதில் திறமையானவை. கிளிகள் மனிதர்களின் பல மொழிகளையும் கூட பேசுகின்றன. ஆனால் போனின் ரிங்டோனை  காப்பியடிக்கும் சில கிளிகள் இருப்பதை அறிந்தால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். கிளியின் பெயர் Gucci. கிளி ஐபோன் (iPhone) ரிங்டோனை அப்படியே இசைப்பது உங்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தும். துளி கூட பிசகாமல் ரிங்டோனை இசைப்பது மிகவும் ரசிக்கத்தகுந்ததாகவும் உள்ளது. இந்த செல்ல கிளியின் வீடியோ இணையத்தில் வைரலாகி (Viral Video) வருகிறது.

ALSO READ | மான் குட்டியை காப்பாற்ற ஹீரோவாக மாறிய நாய்! வைரலாகும் வீடியோ!

ALSO READ | என் தேவதை வந்துட்டா!! தேம்பி அழுத மாப்பிள்ளை, தேற்றிய மணப்பெண், வைரலான வீடியோ

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News