’உலக மகா கிரிக்கட்டு டா சாமி’ இப்படியொரு பீல்டிங்க பார்க்கவே முடியாது - வைரல் வீடியோ

கிரிக்கெட் பார்ப்பவராக இருந்தால் நீங்கள் நிச்சயம் இப்படியொரு கிரிக்கெட் போட்டியை வாழ்நாளில் பார்த்திருக்க முடியாது. அப்படியான விநோத சம்பவத்தை இந்த வீடியோவில் நீங்கள் பார்க்கலாம்.   

Written by - S.Karthikeyan | Last Updated : Apr 30, 2023, 01:07 PM IST
’உலக மகா கிரிக்கட்டு டா சாமி’ இப்படியொரு பீல்டிங்க பார்க்கவே முடியாது - வைரல் வீடியோ title=

கால்பந்துக்கு அடுத்தபடியாக உலகில் ஆதிக்கம் செலுத்தும் போடியாக கிரிக்கெட் வளர்ந்துவிட்டது. இந்தியாவைக் கடந்து இப்போது ஐரோப்பிய நாடுகளும் கிரிக்கெட் விளையாட தொடங்கிவிட்டன. அந்தளவுக்கு அதன் மீதான ஈர்ப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. காரணம், கிரிக்கெட் போட்டி விறுவிறுப்பாக நடைபெறுவதும், களத்தில் நடைபெறும் சில சுவாரஸ்யமான சம்பவங்களுமே கிரிக்கெட் மீதான ஈர்ப்பை அதிகரிக்கிறது. சர்வதேச கிரிக்கெட் போட்டியைக் கடந்து உள்ளூர் போட்டிகளிலும் பல விநோத மற்றும் சுவாரஸ்யமான சம்பவங்கள் நிகழும். உண்மையில் நீங்கள் கிரிக்கெட் ரசிகராக இருந்தால் அப்படியான சம்பவங்களை பார்க்கும்போது வாழ்நாள் முழுவதும் நினைத்து நினைத்து சிரித்துக் கொண்டே இருப்பீர்கள். 

மேலும் படிக்க | ராட்சத கொடூர மலைப்பாம்புகள் Vs அப்பாவி பிராணிகள்: திக் திக் வைரல் வீடியோ

அப்படியான சம்பவத்தைக் கொண்ட வீடியோ தான் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இப்போது வைரலாகியிருக்கிறது. பந்து விக்கெட் கீப்பரிடம் இருக்கும்போது பேட்ஸ்மேன்கள் தாராளமாக 3 ரன்கள் ஓடி எடுக்கும் சம்பவம் கற்பனையில் கூட நினைத்து பார்க்க முடியாத ஒரு விநோத சம்பவம். ஆனால் அதுவும் நடந்திருக்கிறது என்பது விநோதத்தின் உச்சமாக கிரிக்கெட் ஆர்வலர்களால் பார்க்கப்படுகிறது. என்ன தான் கிரிக்கெட் விளையாட தெரியாமல் விளையாடினாலும், பந்தை கையில் வைத்திருந்தால் கூட 3 ரன்கள் நிச்சயம் ஓடியிருக்க முடியாது. ஆனால், இங்கு நடந்ததே வேறு. அதனை நீங்கள் வீடியோவில் இங்கே பாருங்கள்..

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

 

அதாவது வழக்கம்போல் பவுலர் வேகமாக ஓடி வந்து வீச, பேட்ஸ்மேன் பந்தை அடிக்காமல் மிஸ் செய்கிறார். அந்த பந்து விக்கெட் கீப்பரின் கையில் தஞ்சமாகிறது. அந்த இடத்தில் தான் டிவிஸ்ட். அதுஎன்னவென்றால், விக்கெட் கீப்பர் பந்தை பிடிப்பதில் சிறு தடுமாற்றம் செய்கிறார். இதனை கவனித்த பேட்ஸ்மேன் ஒரு ரன்னுக்கு ஓட முயற்சிக்கிறார். உடனே விக்கெட் கீப்பர் பந்தை எடுத்து ஸ்டம்பை அடிக்க முயற்சிக்க அது படாமல் பவுலரின் கையில் செல்கிறது. 

அதற்குள் பேட்ஸ்மேன்கள் இருவரும் ஒரு ரன் ஓடி விடுகின்றனர். இப்போது கையில் இருக்கும் பந்தை வைத்துக் கொண்டு பவுலர் அமைதியாக இருக்காமல் தானும் ரன்அவுட் அடிக்கிறேன் என பந்தை வீச, அதுவும் ஸ்டம்பில் படாமல் செல்கிறது. இதற்குள் இன்னொரு ரன் என மொத்தம் 3 ரன்கள் இப்படியே எடுக்கின்றனர் அந்த இரு பேட்ஸ்மேன்கள். கடைசியாக இந்த கிரிக்கெட் ஆட்டம் முடிவுக்கு வர, வீடியோவை பார்த்த கிரிக்கெட் ரசிகர்கள் இப்படியும் ஒரு கிரிக்கெட் விளையாடி இருக்கிறார்களே என தலையில் அடித்துக் கொள்கின்றனர்.  

மேலும் படிக்க | சில்மிஷம் செய்த குரங்கை முறைத்த பெண்: 'பளார்..' ஒரே அடி...வைரல் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News